ஞாயிறு, 4 ஜூலை, 2010

puthukavithai

ஊமை விழிகள்
ஊமை விழிகள்
தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......


தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....

உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....

கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....

அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....

தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....

கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....

இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....

ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......

சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....

புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....

இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்
*******************************************
வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது ...
***************************************
இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு
சில்லாய் உடைந்திருக்குமோ ...
*************************************************
அரிது அரிது
அரிது அரிது மானிடராய் ......
பிறத்தல் அரிது -அப்படி ...
பிறந்திடினும் நல்ல மனிதராய் ....
வாழ்ந்து காட்டுதல் அதிலும் அரிது ....
தவறு தவறு காதல் -தவறு ...
அதிலும் பெற்றோர்கள் .....
மறுக்கும் காதலெல்லாம் ...
தவறு தவறு தான் ......
உண்மை உண்மை ....
குடும்பம் உண்மை -அதில் ...
கிடைக்கும் காதல் உண்மை ....
வாழும் வாழ்கை உண்மை ....
கிடைக்கும் சதோஷம் உண்மை ...
மானிட பிறப்பினை உணர்த்திடும் ..
உலகம் இது என்பது உண்மை ...
நட்பு நட்பு கிடைத்தால் -உண்மை ...
பிரிதல் பிரிதல் இதில் அதுவும் உண்மை ...
உயிர் காக்கும் நட்பும் உண்மை ...
உறவை பிரிக்கும் நட்பும் உண்மை ..
உற்ற நேரத்தில் உண்மை நிலை ...
உணர்த்துதலும் இங்கு உண்டு
******************************************

உன் காதல்
சிறகு முளைத்து பறக்க -நினைக்கும் ...
சின்ன பறவை உன் -காதல் .....
பறக்க துடித்தாலும் நிதானமாய் ......
தயங்கி நிற்க காரணம் -பயம் ..
உயரம் தெரிந்து விண்ணை -எட்ட ..
எட்டாத உயரத்தை அடைய நிணைத்து ...
உயரத்தில் பறக்கும் வில்லன் வல்லூறுகளிடம் ..
மாட்டிக்கொண்டால் என் செய்வது .....
சிறகு முளைத்த காதலின் ...
சிறகு வெட்ட பட்டால் கூட -பிறகு ..
முளைத்துவிடும் மீண்டும் முயற்சி ...
செய்யலாம் என்ற நம்பிக்கை வரும் ...
அனால் முழுங்கி விட்டால் அந்தோ ...
உன் கதை முடிந்து விடுமே .
.சொந்த மாமாவை போல -காக்கா ...
என்றால் எப்படியும் சமாளிக்கலாம் ...
தப்பிக்க வழி உண்டு -ஆனா ..
வல்லூறுகளிடம் முடியாத -போது ..
சிறகு முளைத்த சின பார்வை -நீ ..
அம்மா கொடுக்கும் உன்னவை ...
தின்று -விட்டு ..அடக்கமாய் -மரத்தில் ...
அமர்ந்து வேடிக்கை பார் போதும் ..
நேரம் வரும்போது அம்மா பறவை ..
உயரத்திற்கு உன்னை அழைத்தி செல்லும் ..
a
**************************************************
காதலித்தால்
காதலித்து பார்த்தால் ...
வானம் மட்டும் .வசப்படாது ....
அங்கிருக்கும் சூரியனும் ....
சந்திரனும் கூட உனக்கு அடிமை ...
நட்சத்திர கூட்டங்கள் -நீ .....
நீ அள்ளிதெளிக்கும் ....
முத்து குவியல்கலாகும் ...
பூமியும் உன் வசப்படும் ...
என்பது மட்டுமில்லை ...
அங்கு இருக்கும் மரம் ..
மட்டை செடி கொடி ...
உயிரினங்கள் எல்லாமும் ....
உன் ஏவளுக்கு காத்து நிற்கும் ...
பார்பவரை எல்லாம் நீ காதலித்தால் ...
இங்கு -வானத்திலும் பூமியிலும் ....
எந்த காதலயின் மனமும் ...
உனக்கு எப்போதும் வசப்படாது
***********************************************************

சாட்
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது ..
பயங்கரமாய் தெரியுது ...
யாரையும் புரியலை ..
எப்படின்னு தெரியலை ... ...
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
முகம் மறைத்து வருகிறார் ..
.நிழலாய் உருவம் காட்டுகிறார்கள் ...
கோரமுகத்தை மட்டுமா ...
உண்மைமுகத்தை கூடவும்...
உலகத்திற்கு மறைத்து காட்டுகிறார்கள் ...
பாசமாக பேசும்போதும் ....
பண்பாக பழகும்போதும் ...
ஆன் லைனில் பேசுவோம்...
உயிர்விடும்வரை நட்பாவோம் ....
என்று மரியாதையாய் சொல்லவும் ..
பவம் என்று பார்க்க போனால் ....
பாதை மாறி பேசுகிறார்கள் ....
ஆண்கள் மட்டுமே இங்கு ..
பெயர்மாற்றம் செய்கின்றனர் ....
முகத்தையும் மறைகின்றனர் ...
ஏனேன்று புரியலை ...
எதற்கு என்று தெரியலை ..
ஒன்னுமே புரியலை சாட் -பகுதியிலே...
மர்மமாய் இருக்குது
**********************************************
காத்திருப்பது
காதலிப்பதாக சொல்லி ...
நீ -கால் கடுக்க நாள் ...
முழுவதும் எனக்காக ...
காத்திருந்தாலும் நான் ...
உன்னை கடக்கும்போது .....
மொவ்நித்து போனாலும் ...
நாள் முழுவதும் நீ ....
என்னை தேடி வருவது ...
என்னக்காகவ இல்லை ...
என் தோழிகளை சைட் ....
அடிப்பதற்க்கோ என்று புரியவில்லை ...
என்னை மட்டும் நீ ...
தனித்து பார்த்தல் ...
ஓரு வேளை யோசிக்கலாம் ...
நீ எனக்காக வருவதென்று ...
ஆனால் -நான் தோழிகளுடன் ...
செல்லும்போது மட்டும் நீ ...
பின் தொடர்ந்து வருவதால் ..
எனக்கு அர்த்தம் புரியவில்லை ...
நீ -யாருக்கெல்லாம் குறிவைத்து ....
பின்தொடருகிறாய் என்று ...

*****************************************************

தியாகம்
நான் -உனக்காக எதையும் .....
தியாகம் செயவேன் என்றேன் ...
ஆனால் -நீ ...எதர்காகவும் .....
உன்னை தியாகம் செய்யவில்லை ....
அதனால் நான் என்னை .....
தியாகம் செய்து என்னை ...
உனக்கு உணர்த்தி விட்டேன் ...
ஓய்வ்வொரு முறையும் -நீ ..
என் வாசலை கடக்கும் -போதும் ....
நீ -என் கொலுசுஒலி கேட்டு .....
திரும்பி பார்க்கும் அர்த்தமும் .....
பார்வையும் எனக்கு புரியவில்லை ...
என் வீட்டு எலிகள் .....
உனக்கு கிடைக்காமல் ...
என் கொலுசு சத்தத்தில் ....
பயந்து ஓடி விடுவதால் .....
என்னை நீ முறைபதாய் ...
.நான் நினைதேன் ....
திருட்டு பூனையே...
*****************************
அன்புள்ள மகனுக்கு
அன்புள்ள மகனுக்கு -உன் ...
அப்பா அம்மா எழுதும் ...
அன்புக் காடிதம் ...
நீ -குளு குளு அறையில் ....
கணிப்பொறியில் பனி செய்யினும் ...
நம் - கரிச்சல் காட்டை ....
மறக்க மனம் இல்லையோ ....
ஏர் பிடித்த உன் -தந்தையின் ...
கரம் பிடித்து நடக்க -இனி ...
உனக்கு -இப்போது நேரம் கிடைக்குமோ ..
வெயில் மழையில் நனைந்தாலும் ...
கஞ்சி குடித்தாவது -நாங்கள் ...
எம் நிலை மாற -உன்னை ...
படிக்க வைத்து வீண் போகவில்லை ...
மகனே -கூலிகள் எனும் நம் நிலை ....
இப்போது -மாறி போனாலும் ...
உயர்நிலையில் இருந்தாலும் ...
பட்டாம் பூச்சியாய் -நீ ...
எங்களுடன் வயல் காட்டில் ...
திரிந்த இனிய நினைவுகள் ...
இனி -எப்போது கிடைக்குமோ ...
உலகம் -சுற்ற நீ எங்களை ....
அழைத்தாலும் இக் கிராமமே ....
எங்களுக்கு உலகம் அப்பா ...
இங்கு இருக்கும் இயற்கையும் ....
குளு குளு காற்றும் ....
மனம் -தொட்ட தென்றலும் ...
இனிய -மண் வாசனையும் ...
சல சலக்கும் ஆற்று நீரும் ...
அங்கு கிடைக்குமோ ...
பள பளக்கும் பட்டினத்தில் ....
உண்மை -அன்பு கிடைக்குமா ...
முதலில் நீயோ சில நாட்கள் ....
கிராமம் வந்து எங்களுடன்

தங்கிவிடு தங்கிவிடு ...
அது போதும் எங்களுக்கு ....
எப்போதும் சந்தோசம் ....
வருகிறோம் வருகிறோம்
எம் -வாழ் நாட்களின் இறுதியில் ...
உன்னுடனே இருப்பதற்கு ..
நாங்கள் இங்கு இருந்தாலும் ..
எம் -மனங்களோ எப்போதும் ...
உன்னை சுற்றி மட்டுமே
***********************************************
கண்ணாடி

என்னவளே என் கன்னத்தில் ....
நீ கொடுத்ததோ என் -இதயத்தில் ....
இடியாய் இறங்கியதால் -அது ...
என் -நினைவில் மண்ணாய் விழுந்ததே...
கணவில் உன்னை முத்தமிட்டதற்காக .....
என் -காதலியாய் உன்னை நினைத்து ...
நீ-தந்த பரிசு உன் கால் செருப்பில் ...
பல பல அடிகள் மட்டும்
*****************************************************

கதவு
காண்ணாடி கதவின்னுள் இருக்கும் ..
உருவம் பொருட்களை -அறியலாம் ...
ஆயினும் ஒலியை கேட்டல் முடியாது ...
மரம் இரும்பு கதவுகளின் ..
உட்பக்க உருவம் பொருட்களை ...
பார்த்தல் இயலாது -ஆயினும் ...
ஒலியை அறிதல் முடியும் ...
ஆனால் -ஜெயில் கதவுகளில் ...
உள் வெளி இருபுறமும் ....
உருவத்தையும் பொருளையும் .-பார்த்தாலும் ....
ஒலியினை அறிதலும் முடியும் ..
ஆனால் -அவற்றின் உண்மை நிலைதனையும் ..
அவர்களின் உண்மை மன நிலைமையையும் ....
அறிதலென்பது முடியாததே ஆகும்
*********************************************************
கிடைத்தது
உளிகொண்டு செதுகியதால் .....
பாறை சிற்பமாயினும் ....
மதி கொண்டு செதுக்கிய -அறிவே ....
பட்ட படிப்பாய் ஆனதுவும் ....
பலவகையாய் சமைத்த உணவே....
அருன்சுவையாய் சுவைப்பதும் .....
சுருதி சேர்த்து பாடும் வரிகளே ....
பாடலாய் இன்பம் தருவதும் ....
சலங்கைகள் கோர்த்த கொலுசே ...
ஜல் ஜல் என ஓசை தருவதும் .....
பலவண்ண மலர்களில் சேகரித்து ....
ஒரு -கூட்டில் கிடைத்த தேன் சுவைப்பதும் ....
இயற்கையாய் கிடைதலே -ஆயினும் ....
அன்பும் நட்பும் ஒருவரை -நாம் ....
தெரிந்தும் தெரியாமலும் -அவரை ...
பார்த்தும் தானாகவே -நம் ....
மனதில் உதிபதாகும்
*************************************************************ள்
ஒன்ற்லிருந்து ஒன்று
நம்பிக்கையின் நாணயம் -நட்பு ....
உன்னத உணர்வின் நாணயம் -அன்பு ....
உயிரோடு இணைந்த உன்னதமே - தாம்பத்யம்
உணர்வோடு கலந்த வாழ்க்கையோ - ..குடும்பம் ..
பாசத்தால் பினைந்ததோ -பந்தம் ....
உதிரத்தில் உதித்த முத்துக்கள் -குழந்தைகள் ...
உறவுகளில் மலர்வதே -சொந்தங்கள் ....
திருமணத்தில் இணைவதே -தம்பதியர் ....
எதிலும் சம்பந்தம் இல்லாது -வருவது ....
எதிலும் இணையாது எல்லா - உயிர்களுக்கும் ..
என் நிலையிலும் வருவது - மரணம்

****************************************************
குப்பை மேடு
குப்பை மேடும் கோபுரமான்தே.....
குப்பைகாரனின் முயற்சியால் .....
காகித குப்பைகளை சேகரித்து ....
விற்றதால் கிடைத்த - பணம் ....
என்னும் காகிதத்தால் -மதிப்பாய் ....
உயர்ந்ததுவே குப்பைமேடும் ....
கோபுரமாய் உயர்ந்த கோபுரமாய்
*********************************************************
இதயம்
நான் உன்னை விரும்புகிறேன் ......
என்றுரைத்த வாக்கியம் -அவள் ....
இதயத்தில் இனிமையாய் - இன்பத்தை ....
தூண்டுகிறது என்றாளே......
ஆனால் -இன்னொருவனையும் நான் ...
விரும்புகிறேன் என்று அவளுரைத்த ....
அம் -மூன்று வாக்கியமோ ...
என் - இதயத்தில் இடியாய்-இறங்கியதால் ...
என் -இதயம் நொறுங்கிப் போனதுவே
****************************************************
கனவு
நிழலும் நிஜமும் ...
நிகழ்வது கணவில் ....
நினைத்ததை செய்வது ....
வாழும் வாழ்வில் மட்டும்தான் ...
கனவுகள் எல்லாம் நிகழ்வதும் இல்லை ..
நிகழ்வதெல்லாம் கணவாய்....
போய்விடுவதும் இல்லை
**********************************************
பனிக்கட்டி
பனிக்கட்டியாய் குளிர்ந்த -இதையம் ....
பனி - மெல்ல மெல்ல கறைந்து ....
காணாமல் மறைவது போல் .....
அவள் -பேசில் கரைந்து போய்....
என் -சொத்தெல்லாம் மறைந்ததுவே....
காணாத காற்றை போல் .....
****************************************************************

கண்ணீர்
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது
*********************************************************
பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் நடத்துவோரின் .....
வாழ்வு நிலை மாறியது -எப்போதே .....
நூலிழையாய் இவர்கள் -வாழ்வதும் .....
எங்கேயோ சில இடங்களில் தற்ப்போதே...
******************************************************

... பிரகாசம்
எரிகின்ற தீப சுடரின் ...
பிரகாசம் போல் ....
தெளிந்த மனங்களின் .....
நினைவுகள் எப்போதும் .....
முன்னேற்ற் பாதைகளில் ...
முன்னேரி சுடர்விட்டு .....
பிரகாசிக்கும் பிரகாசமாக மட்டுமே ...
***********************************************
சிலிர்ப்பு
பனித்துளி இறங்கிய ...
தொண்டை குழி சில்லிட்டு ...
உடல் சிலிர்க்கும் சில -நிமிடங்கள் ....
சயனைட் இறங்கிய .....
தொண்டை குழி சில்லிட்டு ....
உடல் -சிலிர்ப்பு அடங்கிவிடும் ....
உடல் விறைத்து உயிர் -நின்றுவிடும் ....
அந்த சில நிமிடங்களில்
*****************************************
கண்ணீr
கண்ணீர் கப்பலிலே ...
தத்தளிக்கும் விழிபாவையே.....
நான் -கண் மூடி விட்டாலே...
நீர் வடிந்து நிற்பாய் -நீ ...
இருட்டில் வழி தெரியாது ...

*******************************************
இதையம்
மின்னலாய் வந்தவளே...
சுனாமியாய் போனது ஏனோ .....
என் -இதையத்தை சுருட்டிக்கொண்டு ...
மீண்டும் வருவாய் -என ...
காத்து இருக்கிறேன் உனக்காக ...
உன் -இதையத்தையும் சேர்த்து ...
என்னிடம் திருப்பி தருவாய் என்பதற்காக ...

சிறகு
சிறகு விரித்து பறக்கும் - பறவைக்கு .....
பறக்கும் இடமெல்லாம் சொந்தம் .....
சிறகில்லா பாவைகளுக்கு ....
இருக்கும் இடமே சொந்தமில்லை ....
சில இடங்களில் இப்போது

***************************************

natpu
நினைவில் நின்ற நீங்கா -நட்பே....
உன்-மாறாத நட்பை மனதில் ....
பதிய வைக்க அனுப்பியதோ -இந்த ...
தூது ஓலை எனக்காக நன்பறே
*********************************
கலைக்கூடம்
கலைக்கூட சிற்ப்பங்களை ...
காண்பதற்கு எல்லோருக்கும் ....
வரி விதிப்பு உண்டு எப்போதும் ...
வீட்டில் வளரும் உயிர் சிற்பங்களுக்கு ...
மற்றவர்களுடன் பேச உண்டு எப்போதும் ...
தடை விதிப்பு தடைவிதிப்பு
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும்
*****************************

கிராமத்து ஆசை
கஞ்சி கலையம் எடுத்து ....
கருவாட்டு துவையல் செஞ்சி ....
தலைமேலே சுமந்து வரும் ....
மல்லிகை பூ கொண்டைகாரி ....
மையில் கணக்காய் நீ நடந்து -வந்தாய் .....
எம் -மனசு நோகுதடி தங்கமே....
நீ -வந்த பதையில்லே ......
கல்லும் முள்ளும் குத்தியதோ ....
கால்வயிறு கஞ்சிக்காக ....
கதிர்றருத்து களைபறிக்கும் -எல்லோருக்கும் ....
களைப்பு தெரியாமல் வேலை செய்ய ...
மனம் குளிர பாடுபவளே.....
மட்சானின் மனசுகுள்ளே....
ஆசை ஒன்னு இருக்குதம்மா .....
நம் -காலம் முடியும் முன்னே......
நாலு காசு சேர்த்து வைத்து .....
காதோலை மூக்குத்தியும் ......
ஐந்துவட சங்கிலியும் உன் -கழுத்தில் ....
பூட்டிவிட்டு உன் முகத்தில் .....
சிரிப்புதனை மனம் குளிர பார்த்திடனும் ....
புள்ளகுட்டி எல்லாத்தையும் .....
.விவசாயம் படிக்கவைத்து
சீமைகெல்லாம் அனுப்பி வைத்து .....
கிராமங்களின் புகழ் பரப்பி .....
பொருளாதார தரம் உயர்த்தி ....
நம் -தமிழ் நாட்டை நிலை நிறுத்தி ....
உலக தரத்தில் தாய்நாட்டின் புகழ் -பறப்பி...
பாராட்டு பெறவேண்டும் ....
பார்புகழ வாழ்ந்திடுவோம் ....
மனிதனாய் பிறந்திட்ட ......
பிறவி பயன் அடைந்திடவே
சந்தோஷ பூந்தோட்டம் அமைத்து .....
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம் .....
அழகு பூக்களை பெற்று ......
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
***********************************************************

கருத்துகள் இல்லை: