வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithaigal

ட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !

நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.



******************************************************

நட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்

எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்

பிரிவு என்பது வார்த்தையில் இல்லை
வாழும் வாழ்க்கையிலும் இல்லை

காத்திருக்க சொல்லி காலமாய் ஏமாற்றினாலும்
காத்திருந்து காத்திருந்து நொந்த
உள்ளத்திற்கு தெரியும் பிரிவின் துயரம்

சொல்லாமல் செல்லும் நட்புக்கும்
சொல்லி செல்லும் நட்பிற்கும்
காத்திருத்தலின் துயரம் தெரியாது

தீடீர் என்று மாறி புரியாது பிரியும்
நட்பிற்கு தன் தவறு புரியாது என்றும்

தன் தவறு புரியாது
கோபபடுவது அர்த்தமில்லாத நட்பு
உண்மை அன்பும் இல்லை
உண்மை நட்பும் இல்லை

******************************************************************

எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின
அன்பு நட்புகள் -கல்லூரி தோழமைகள் !



விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது

******************************************************

கருத்துகள் இல்லை: