செவ்வாய், 28 செப்டம்பர், 2010

இதயம்
----------------------
என் அன்புக்குரியவர்களின் வரிசையில் -நீயும்
என் இதய துடிப்பின் ஓசையில் -நீயும்
நிமிடத்தின் நினைவுகளில் எப்போதும்
நீங்க நினைவாய் -நீயும்

பாராமுகமாய் இருந்தாலும் -உன்
இதயத்தை தொட்டு கேள்-இவள்
என் நட்புகுரியவளா என்று ?

இதயம் சொல்லும் உன் உயிருடன்
நினைவுகளுடன் மூட்சாய் கலந்தவள் என்று
நட்பு என்று சொன்னாலும் நேசமும் உண்டு என்று

அடுத்த ஜென்மம் இருதால் -இருவரும்
ஒன்றாய் சேர இறைவனை பிரத்தனை -செய்
உன் நட்பு உண்மை என்றால்
********************************************

நட்பே

நட்பாய் இருந்தாலும் இதயத்தின்
மூலையில் எங்கோ அன்புகுரியவராய் ஒட்டிக்கொண்டு
கண்விழித்து கண் மூடும்வறை
உண்னை சுற்றி நிணைவுகள்
அலைபாய காரணம் என்னவோ
உன் விளையாட்டு தனமான பேச்சோ -இல்லை
எப்போதும் இல்லாத நட்பு என்ற காரணமோ புரியலை
நீ -என் அன்புக்குரிய நட்பாய் மாறியது
*****************************************

இறைவன்

கண்னுக்கு அரூபமாய்
நம் இஷ்டத்திற்கு ஏற்று சொரூபமாய்
இல்லாத ஓரு சக்தி நமக்கு
கேட்பதை அருளும் நம்பிக்கைதான் -இறைவன்

இறைகளிலும் அசைவம் சைவம் -என (இறை -இறைவன் )
பிரிவினை சக்தி உண்டு
சொரூப இறைகள் கொடூர இறைகள் -என

அமைதியான இறைவனுக்கு துளசியும் பூவும்
கொடூர இறைவனுக்கு உயிரினங்கள் பலியிடுதல்
ஆனால் -இரண்டையும் கும்பிடும் மனிதஇனங்களோ
தம் இஷ்டத்திற்கு இறைவனின் பெயரை சொல்லி
இல்லாத கர்மங்களை செய்து -+தம்
கர்மங்களுக்கு பாபங்களை சேர்க்கிறது

ஏதோ -இறவன் எனும் அரூபதிற்காவது
பயப்படும் ஜீவன்கள் இன்னும் இருக்கின்றன
கண்ணிற்கு புலபடவிட்டலும்
நம்பிக்கையில் கண்டு உணர்கின்றனர் -இறைவனை
***************************************

அயோத்தி
அயோத்தி மனகரமாம்
அதை சிந்தித்தாலோ தசரத மன்னனும்
அவன் மூன்று மனைவிகளும் குழந்தைகளும்
அந்த ஆட்சியும் நினைவில் நீங்கா

செல்லை பிள்ளை ராமனோ
சித்திரை பதுமை சீதையை மணந்து
சீரழித்தான் அவள் வாழ்கையை
தந்தையின் ன் கட்டளைக்கு பணித்து

தசரதனோ ஓரு மனைவியின் பேஅராசையால்
ராமனை பிரிந்து இறந்து
நாட்டை சீரழித்தான் -அயோத்தியில்
சந்தோசம் இருந்ததோ இல்லையோ
சோகம் நிறைய இருந்தது -உண்மை

********************************

மனித நேயம்
அன்பு பாசம் நேசம் -இவை
மனித மனங்களிடம் நலிந்து வருகிறதோ !
கரணம் இன்றைய சூழலும்
பணம் பணம் என தேடிதிரியும் -நிலையும்

மனம் இருந்தால் மார்க்கம் -எனும்
நிலை மாறி பணம் இருந்தால்
எல்லாம் -ஜெயம் எனும் நிலை

மனம் - இருபவருக்கோ பணம் இருபதில்லை
பணம் இருபவருக்கோ மனம் இருபதில்லை
இரண்டும் இருந்தாலோ அவருக்கோ
ஆயிரம் ஆயிரம் பிரசினைகள் என் செய்ய ?

நம்மை பெற்று வளர்த்து தோள் கொடுத்து
வாழ்க்கைக்கு வழிகாட்டிய பெற்றோருக்கு
தள்ளாத வயதில் தோள்சாய
தோள் கொடுக்கும் மனித நேயம் வேண்டும்
சுமையாக நினைத்து முதியோர் இலங்கைளில்
அவர்களுக்கு இடம் தேடிதந்தால் -நாளை
நாளை நமக்கும் அந்நிலை என மறக்க கூடாது

தினம் சந்திக்கும் பிட்ச்சைகாரர்கள் என்றாலும்
என்றோ ஒருநாள் சில்லறை கொடுக்கும்
இரக்கமும் மனித நேயம்மும் வேண்டும்

அனாதைகள் என்றால் துன்புருத்தாது
அரவணைத்து அனுசரித்து அன்பை பொழியும்
நல் குணமும் மனித நேயம்மும் வேண்டும்

மனிதராய் பிறக்க மாதவம்
செய்தோமா செய்கிறோமா தேவை -இல்லை
மனிதராய் பிறந்த பின் நம்
கண்ணினில் படும் உயிர்களிடம்
அன்பும் இரக்கமும் காட்டும்
மனித நேயம்மும் வெண்டும்
பிறந்த இப் பிறப்பிற்கும் ஒர் அர்த்தம் வேண்டும்

மனிதராய் பிறந்தால் இப்படி பிறக்க வேண்டும் -என
மற்றவர்கள் நம்மை பார்த்து பொறமை படும்
மனித நேயம்மும் வேண்டும்

பிறந்ததோ இட்ஜென்மம்
பிறக்கு உதவிடவே எனும்
நினைவும் நிகழ்வும் நடத்திடும்
மனித நேயம்மும் வேண்டும்
******************************

கனவுகள்
கனவுகளோ ஆயிரம்
கற்பனைகளோ ஒறாயிரம்
நிணைவுகள் நடப்பதோ
சில துளிகள் மட்டும்

கடல் போல் ஆசை என்றாலும்
புயல் போல் காதல் என்றாலும்
மணலில் எழுதிய எழுத்துக்களை
அலைகள் தொடும் நாள் எதுவோ
அது போல் நம் கனவுகள் நினைவேறும்
நிகழ்வுகள் என்றோ எப்படியோ ?

கனவுகள் காண்போம் அதில்லேனும்
சந்தோசமாய் வாழ்ந்திடுவோம்
நினைவகினும் இல்லாவிடினும்

-------------------------------------

நட்பு
உன் மனதை தொட்ட -நட்புக்களை
உன்னால் என்றும் ஒதுக்க முடியாது

உன் -நினைவில் தேங்கிய நினைவுகளை
என்றும் அழிக்க முடியாது -உன்னால்

அது -நல்ல நட்பு தீய நட்பு என
நீ -உன் அறிவால் பகுத்து அறிந்தாலும்

ஏனெனில் நட்பு என்பது -எதையும்
ஆராயாமல் அன்பால் விளைவது

நன்மை தீமை லாபம் நஷ்டம்
எதிர் பாராது நேசாதால் உணர்வது -நட்பு
***********************************************

நட்பே
உன் மனம் உன்னிடம் இலையோ ?
உன் -நிணைவுகள் உன்னிடம் இலையோ?

இல்லை என்றால் நட்பை மறக்கும்
மனிதனும் நீ இல்லை
நட்பை மறுக்கும் மனிதனும் நீ -இல்லை

திடீர் என்று தொலைந்த உண்னை
உன் -நட்புகள் தேடுகின்றனா
உனக்கு என்ன ஆனதோ
என்று வேதனையில் தவிக்கின்றன
உனக்கு என்ன குறையோ கஷ்டமோ என்று
***************************************

நிலவே உன் மேல் கோபம்

நிலவே -உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்த காரணம் -ஏனோ?

ஆணினத்தில் பால்போன்ற முகமும்
கள்ளமில்லா சிரிப்பும்
களங்கமில்லா அன்பும்
அழகான உருவம் உடையோரும் -இல்லையோ?

ஆனால் -உன் அழகிற்கும்
ஒளியின் பிரகசதிற்கும் -நிலவே
உண்னை பெண்களுக்கு மட்டும்
உவமை படுத்தி பெருமைபடுத்த
காரணம் ஏனோ புரியவில்லை -அதனால்
நிலவே உன் மேல் எனக்கு கோபம்
**************************************
நிலவே

அன்னை அவளோ இரவினில்
உண்னை காட்டி அமுதூட்டினாள்
வளர வளர நிலவைப்போல் -நீயும்
அழகு என உட்சி முகர்ந்து முத்தமிட்டாள்

வீட்டு முற்றத்தில் உறங்கும் போது
உன்னில் இருக்கும் நிழல் யார் ?-என
விளித்தாலோ தாத்தா புன்னைகையுடன்
உன் -பாட்டி வடை சுடுகிறாள் என்பார்

பெண்ணாய் வளர்ந்ததும் -நீயும்
நானும் வேறு என உணர்ந்தேன்
தினமும் -உண்னை ரசித்தேன் சிரித்தேன்
உன் -அழகிற்கு எதுவும் ஈடும் -இல்லை
ஒப்பும் இல்லை என வியந்தேன்

இரவில் மட்டும் நான் எங்கு சென்றாலும்
நீ - என்னை துரத்துவது ஏனோ ?
என் மீது அத்தனை பாசமோ !
உண்னை நான் பிரிய கூடாது என்றோ ?

ஆதி இடை கடை நிலைகளில் -எனக்கு
கிடைக்கும் உறவுகளும் நட்ப்புகளும்
என்னை விட்டு மாறலாம் போகலாம்
ஆனால் -நீ மட்டும் எனக்கு நிணைவு தெரிந்த
நாள் முதலாய் என்னை தொடருகிறாய்
எங்கு நின்று பார்த்தாலும் சிரிக்கின்றாய்
என்னை சந்தோஷ படுத்துகின்றாய்

நீ வராத அந்த அமாவசை மட்டும்
எனக்கு சூனியமாய் போய்விடுகிறது -நிலாவே
இறுதி வரை நீ மட்டுமோ -என்
நேசமும் நட்புமாவாய் நிலவே

கட்டாயம் உண்னை பார்த்து கொண்டு
என் - உயிர் பிரியனும் என் ஆசை நிலவே

----------------------------------------

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

முத்தம்
என்னுள் இருந்த தாகத்திற்கு
என் உதடுகள் பட்டதாலே
உன்னுள் இருத்த மொத்த -ஈரமும்
என்னுள் வார்கபட்டதோ - சொம்பே??????/
************************************
எப்படியோ உறவு வேஆண்டும்

எப்படி ஓரு உறவு வேண்டும்
அது இப்படிதான் இருத்தல் வேண்டும்
மனைவியாக கிடைக்க வேண்டும்
அப்படி ஓரு கற்பனையில் -இதோ

என்னவளே என் வாழ்வை
இனிக்கச் செய்திட வருபவளே
பொன்னகையும் பொறுமையும்
புன்னகையும் பொறுப்பும்
அன்பும் அரவணைப்பும்
பண்பும் பாசமும்
சீராக கொண்டுவந்து
எங்களை சீராட்டி பொழுதும்
பார்த்து பார்த்து காத்திடும்
கருணை உள்ளம் கொண்டவளாய்
மரியாதையையும் மானத்தையும்
உயிராய் கருதுபவளாய் -என்னை
தன் உயிரோடு உயிராய் இனைதவளாய்

அன்பும் ஆசையும் அக்கறையுமாய்
என்னை ஆட்கொண்டு அதிகாரம்
செலுத்தி இல்லறம் நடத்தி -இனிமை
தந்திட ஓரு நல்ல மணைவியை
தந்திடு இறைவா நன்றி சொல்லுவேன் -உனக்கு
*****************************************

latha:
(2) முத்தம்
நான் எந்தனை முறை கெஞ்சினேன் கொஞ்சினேன்
நெற்றியில் இல்லை கன்னத்தில்
ஒரே ஓரு முத்தம் கொடு -என்று

அன்று -வெட்கம் என மறுத்தாய்
இன்றோ -நான் கேட்க்காமலே
அலை பேசியில் அழைத்து
முத்தங்களை மொத்தமாக
அள்ளி தெளித்து -என்னை
வெட்கத்தில்; ஆழ்த்திவிட்டாயே -கண்ணா !!!!!!!!!!

இதை- அன்று நேரிலே தந்திருந்தால்
எத்தனை சந்தோசப்பட்டு இருபேன்
சன்தோசாமெனும் ஆழி பேரலையில் மூழ்கி
ஆகாயத்தி பறந்து விண்ணை தொட்டு இருப்பேனே
போடா என் செல்ல பேராண்டியே
(
( இது பாட்டி சொன்னது )
*********************************

(3) முத்தம்
உண்னை உட்சி முகர்ந்து
நெற்றி முதல் பாதம் வரி
முத்தமிட்டு மகிழ்ந்ததுவோ
உன் -கள்ளமில்லா சிரிப்பை கண்டு
கண் குளிர சந்தோசிக்கவே
என் -அன்பு செல்லமே
என் -உதிரத்தில் உதித்த குட்டி தேவதையே!

உன் -பட்டு மேனியும்
தளிர்கரங்களும் பிஞ்சுகால்களும்
அசைத்து அசைத்து நீ சிரிக்கும் -சிரிப்போ
காண்போரை வாரியணைத்து
முத்தமிட்டு மகிழச்செய்கிறதே
என் -அன்பு செல்லமே செல்லமே
**************************************

மௌனம்
உன் -மௌனம் உனக்கு சந்தோசத்தை தரலாம்
ஆனால் -எல்லோருக்கும் சந்தோசம் தருவதில்லை

மௌனத்தில் அர்த்தம் வேண்டும்
அர்த்தமில்ல மௌனத்தால்
ஆவது எதுவும் இல்லை
அர்த்தமுள்ள மௌனத்தால்
அத்தனையும் அடைந்திடுவாய்
அண்டமும் ஆளலாம் அகிலமும் ஆளலாம் ***
***************************
என்னை பற்றி

முன் பின் அறியாதவர்களிடமும்
எதிரிகளிடமும் துரோகிகளிடமும்
கொலைகாரர்களிடமும் இரக்கமும்
அன்பும் காட்டும் மனம் -உண்டு

ஏனெனில் பிறப்பின் போது
எல்லோரும் தூய்மையானவர்களே
ஆளாகும் சூழ்நிலையில் ஏற்ப்படும்
மாற்றங்களும் பழக்கங்களுமே-ஒருவரை
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றுகிறது
இதில் -ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என-எந்த ஓரு பேதமும் (மாற்றமும் ) இல்லை

பூ மனம் படைத்த எனக்கு
புன்னகைக்கவும் தெரியும்
புயலாக மாறவும் தெரியும்

நட்பு எனும் சொல்லுக்கு நன்றி மறவேன்
அன்பு எனும் சொல்லுக்கு அனைத்தையும் மறவேன்

பேசவும் பழகவும் இனிமையானவள்
இல்லத்தின் இனிமைக்கு சுவை ஏற்றுபவள்
இல்லத்தின் சுமைகளை இனிமையாக சுமப்பவள்
நம்பியோருக்கு ஒளியாக இருப்பேன்
யாமாற்றுபவற்கு இருளாக இருபேன்

முன் ஒன்று பின் ஒன்றுமாக
பேசுபவரை அறிந்தாலோ
மீண்டும் சந்திக்க கூடாது என நினைப்பேன்

அன்புக்கு உரியவர்களின் அடக்குமுறைக்கு
ஆயுளுக்கும் அடிமைப்பட்டு கிடப்பேன்
ஆசை வார்த்தைகளுக்கோ அடிபணிய மாட்டேன்

என் -மென்மையான உள்ளதை ரணப்படுத்தினால்
முள்ளாக குத்தவும் தயங்க மாட்டேன்

மொத்தத்தில் பார்வைக்கு பூவாகவும்
பழகுவதற்கு புயலாகவும் இருபேன்
நல்லோர்க்கும் தியோருக்கும் -தக்கபடி
இப்படிக்கு - பூவும் நானே புயலும் நானே
*****************************
பூங்காவனம்

புல்வெளியே பஞ்சு மெத்தையாகவும்
மரமோ குடையாக நிழல் -தர
அதன் - அசைவினிலே உருவாகும்
காற்றோ - தென்றலாக தாலாட்ட

உதிரும் பூக்களோ வாக்ல்து சொல்ல
நிம்மதியாய் சிலநிமிடம் நித்திரை கொள்ள
ஏழைகளுக்கும் இடம் உண்டு
படுகையரையாக பல பூங்காவனங்கள்
*********************

நிழல்
நம்மை தொடரும் -நிஜம்
நம் -உண்மைகளை பிறகு தெரியாமல்
தன்னுள் புதைத்து கொள்ளும்
நம்மின் நிஜமே நிழல்
*******************

மனமே
மனமே மனமே மயங்காதே
ஆசை புயலில் உழலாதே
உண்மை எதுவும் மறையாதே

நட்பில் நீயும் அழியாதே
அன்பில் என்றும் கரையாதே
ஆழம் அறியாது இறங்காதே
**********************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
****************************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
நீ வருவதும் தெரியும்
போவதும் தெரியும்
ஒளிந்து ஒளிந்து விளையாடுவதும் -புரியும்

ஆனால் -மற்றவர்களை காக்கவைத்து
நோகடிப்பதில் ஏனோ உனக்கு சந்தோசம்
*************************

பெண் மனம்
நங்கூரம் இட்டாலும்
மனதின் நிலைதனை
அறியமுடியாதா இதயம் படைத்தவர்கள்

இதுவரை யாரும் -இவள்
இப்படிதான் எப்போதும் -என
அறிதிட்டு கூறி ஜெய்ததும் -இல்லை
********************

puthukavithai

திங்கள், 6 செப்டம்பர், 2010

புதுக்கவிதை

நெருப்பு

வெந்தணலாய் சுட்டாலும்
அக்கினியாய் கனன்றாலும்
சாம்பலாய் அடங்கினாலும் -நெருப்பே
நீயும் அழகுதான் -உன்
சுவாலையின் பிரகாசத்தில் -நீ
முத்தமிட்ட இடங்கள் எல்லாம்
ஜெக ஜோதியாய் மின்னுகிறதே

என்ன ?அது உயிர்களை- எல்லாம்
துன்பத்தில் அழ்த்திவிடுகிரது
அதுநாளோ -உண்னை கண்டித்தால்(kandittaal)
எல்லோருக்கும் பயம் -வந்திடுகிறது
ஆனால் -உண்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
**********************************************
கவிதை

நீ சொல்ல நான் கேட்டு
கொட்டாவி விட்டு தூங்க
என்னை தாலாட்டிய உன் கவிதைக்கு நன்றி
இன்னும் ஒருமுறை -இந்த
கவிதையை சொல்லி விடாதே
ஏன் -என்றால் நான் தூங்கி
ரொம்ப நேரம் ஆகிவிட்டது

*************************
நட்பே

நட்பே ஓய்வொரு நொடியும்
நம்மை நாம் மறக்ககூடாது
மனதை தளரவிடவும் கூடாது

சில நிமிடங்களில் தோன்றம்
ஆர்வ கோளாறு சில தவறுகளுக்கு
வித்திட்டு விதியை மாற்றும்

நல்லவர் தீயவர் ஆவதும்
தீயவர் நல்லவர் ஆவதும் -உண்டு

நட்பும் அன்பும் புதிதாக கிடைத்தாலும்
அதை முழுதாக ஏட்று கொள்ள முடியாது
ஏதோ பேசலாம் பழகலாம்

நமக்கென்று ஓரு வாழ்கையும்
நட்புக்களும் துணைகளும் நம்மை சுற்றி இருக்கும்
அவைகளுக்கு இந்த நட்பும் பாசமும்
பிடிக்காமல் போகலாம் -எதிர்பும்
தோன்றலாம் நம்மை நாம் எப்போதும்
நடுவராக்கி நடுநிலைபடுத்திடல் வேண்டும்

தினம் தினம் உண்னை பார்த்திடல் வேண்டும்
தினம் தினம் உன்னிடம் பேசிடல் வேண்டும்
எப்போதும் நம் நினைவுகளில் இருவரும்
மறையாது இருத்திடல் வேண்டும்
எண்ணங்களிலும் நினைவுகளிலும்
எப்போதும் ஒற்றுமை வேண்டும்


**************************************
பூ (பெண்)
பூவே உன் ஓய்வ்வொரு -இதழும்
மலர்கிறதோ ஓய்வ்வொரு பொழுதும்
பெண்ணின் புன்னகையாய்

அதனாலே உனக்கு பெண்ணையும்
பெண்ணிற்கு பூவையும்
உதாரணம் சொல்கின்றனரோ ?

**************************
நான்
நான் உண்னை விட்டு
எப்போதும் -விலகுவதும் இல்லை

நான் எப்போதும் உண்னை
கை விடுவதும் இல்லை

நான் என்றும் உன் நினைவில்
தோன்றாது மறைவதும் இல்லை

என்றும் எப்போதும் எதிலும்
உன் நினைவுகளுடன் வாழும் -ஆதி



நான் (இரண்டு) ஜெய மேரி

நீ எப்போதும் என்னை விட்டு
விலகி இருந்தாலும்

என் -கைக்கு எட்டாத தூரத்தில்
எங்கோ இருந்தாலும்

தொட்டு தழுவும் தென்றலிலும்
பட்டு தெறிக்கும் மழை தூறலிலும்
கண்ணை வெட்டும் மின்னலிலும்
என் சுவாசச காற்றிலும்
இதய துடிப்பின் ஓசையிலும்
விழிப்பிலும் உறகதிலும்
எங்கும் எதிலும் எப்போதும்
நீயே நானாக உண்னை மட்டுமே
நினைத்து -வாழும் ஜெயமேரி

********************

கணவு காதலியே

உன்னைப்பற்றி எழுத நினைத்த
எளுதுக்கள் எல்லாம்
காட்டறாய் மறைந்து போகிறதே!

உண்னை -தொட்டு பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
பல்லாங்குளியாய் புதைகிறதே !

உன் -நிணைவுகள் எல்லாம்
தென்றலாக மனதில் நிலைக்கிறதே!
உன் -உருவம் அதுவோ ஓவியமாக
என் -கண்ணில் புதைந்து போகிறதே !

உன் -அசைவுகள் எல்லாம்
இன்ப புயலாய் வந்து -என்னை
புல்லரிக்க வைத்து போகிறதே !

உன் -விழியின் அசைவினை
பார்க்கும் போதோ -மின்னல்
என்னை தாக்குகிறதே !

உன் -பூவிதழ் அசைவின் புன்னகையாலே
பூத்ததுவே என் இதயத்தில் - உன்மேல்
காதல் எனும் உணர்வுகளே !

உன் -சுவாச கற்றை சுவாசித்தாலே
எனை மறந்து போகின்றேனே !
நிஜத்தில் -உண்னை கன்டிடவே
என்றும் துடிக்கிறது என் -மனமோ
என் -கணவு காதலியே
என் -கணவு காதலியே !!!!!!!!!!
***********************************
கடல் கவிதை

போன ஞாயிறு நாளில்
கருப்பா கடலோடு போனாயோ
கருவண்டாய் சுழலும்
மீன் விழி பெண்டிரையும்
மெல்ல மெல்ல கடலுக்குள்
நழுவி செல்லும் மான்விழி பெண்டிரையும்
உன் -பேய் முழி கொண்டு விளித்தாயோ ?????????

பட்டினியாய் வந்து பட்டாணியையும் சுண்டலையும்
பகாசூரனாய் தின்று -பாவைககளை
உன் பார்வையால் ,பருகினாயோ
பல்இளித்து பல்இளித்து வாயும் நோகிறதோ ?

சங்கும் சிப்பியும் பொருகினாயோ
கடல் மண்ணில் எத்தனை ஓவியம் வரைந்தாய்
எத்தனை பெயர்களை கிருக்கினாய்
என்னதான் ஓரு நாளின்
காலை முதல் இரவு வரி
கடற்கரையில் காலத்தை போக்கினாலும்
கடலை போடா எல்லோருக்கும்
எப்போதும் கண்ணிகள் கிடைபதில்லை -புரியுதோ ?
***************************