ஞாயிறு, 30 ஜனவரி, 2011

காதல்

காதல் கத்திரிகாய்
கத்திரிகாயோ வாடினாலும்
குழம்புக்கு உதவும்

காதலோ மலர்ந்தாலும் வாடினாலும்
கண்ணீருக்கு மட்டுமே உதவும்
சந்தோசிகவும் துக்கிக்கவும்
?????????????????????????????????????????????????
இறைவா

காசும் இருக்கு பணமும் இருக்கும்
படுத்து புரள படுகையும் இருக்கும்
ஆனால் பங்கு போடா துணையும் -இல்லை
என்னை மறந்து எங்கு போனதோ -இறைவா

ஆசை ஆசையாய் கரம்பிடித்து
அனபுமனைவியாய் அழைத்துவந்து
இல்லத்து அரசியாக்கி இனிமையாய் வாழ்ந்தும்
இல்லாமல் போனாளே என் மனைவி -இறைவா

காதல் மொழிபேசி
கண் இமைக மறந்தும்
கள்ளமில்லாமல் பழகிய அன்பு மனைவி
என்னை மறந்து போனது ஏனோ -இறைவா

வீடு என்ற கோவினில் வில்லங்கம்
கூடாது அன்பு போதுமென்றால் -என்னை
விட்டு என் துணை போனது ஏனோ இறைவா

பிறந்த பிள்ளை அவன் பின்னாளில்
என்னை மறந்து போக அவனை -என்னிடம்
இருந்து பிரித்து அழைத்து போனது ஏனோ -இறைவா

தோட்டமும் மரங்களும் -அங்கு
சுவாசித்து வாழும் காக்கை குருவிகளும்
என் துணை என்று இப்போது
மாறியது ஏனோ - இறைவா

கொஞ்சி கூவும் குட்டி பறவைகளின் ஒலியோ
என் குழந்தையின் குரலாய் ஒலிக்கிறதே
தூரத்து பெண்களின் மாமோவ் என்ற அழைப்போ
என்னவளின் குரலாய் எனக்கு ஒலிக்கிறதே -இறைவா

ஒன்றுமில்லா சண்டைக்கு
என்னை ஒதுக்கி போனாளே
ஆண் என்ற ஆணவம் என்னையும்
பெண் என்ற திமிர் அவளையும்
பணிந்து போகாது ஆட்டி வைக்கிறதோ
இந்நிலை மாறி நாம் இணைவோமா -இறைவா

காத்திருதளிலும் ஓரு சுகம் இருக்கு
காணமல் ஏங்குவதிலும் ஓரு சுகம் இருக்கு
காலங்கள் கடந்தாலும் கோலங்கள் மாறினாலும்
அவள் என்னை மறந்தாலும் மறுத்தாலும்
எப்போதும் அவளே என் துணை -இறைவா
****************************************************
நட்ப்பே
நட்ப்பே நட்ப்பே -நீ
எப்போ எப்போ வருவாயோ ?
என்னுடன் நிலையாய் நிலையாய் இருப்பாயோ ?
என் -விழிகளோ விழிகளோ எப்போப்தும்
உண்னை தேடி தேடி அலைகின்றதே..........

நீ - நிலையாய் நின்று பார்பாயோ ?
நிம்மதியாய் பேசி சிரிப்பாயோ ?
அலையாய் அடிக்கும் மனதாலே
அன்பை கொட்டி தருவாயோ ?

இல்லாத மொழியெல்லாம் விழியாலே பேசி
வியப்பை நீயும் அள்ளி அள்ளி தருவாயோ ?
நெருப்பாய் சுடும் விழியாலே
விலகி விலக்கி நீயும் போகாதா

மழையாய் பெருகும் என் -அன்பாலே
அதை அணைத்து நானும் மகிழ்வேனே
அன்பெனும் அலைகளில்
ஆசை எனும் நிலைகளை -நீயும்
என்னிடம் கொண்டுவந்து கரை சேர்பாயோ ?

நட்ப்பே நட்ப்பே நீயும் எங்கே ?
நாளும் பொழுதும் நமக்குண்டு
பிரிவும் கூடலும் நமக்கெதற்கு ?
பிரிவு நிலை எப்போதும் தேவை இல்லை
புரிதல் மட்டும் எப்போதும் தேவை இங்கு
நீயோ -எப்போ எப்போ வருவாயோ ?
**************************
இதயம்
இதயமோ கண்ணாடி -அதில்
பதிவதோ நம் நேசங்களே
அன்பெனும் பதிவுகளும்
ஆசை எனும் பதிவுகளும்
எப்போதும் அழிவதில்லை

இருப்பதுவோ ஓர் கைபிடியளவு -இதயம்
நிணைபதுவோ ஓர் கடல் ஆளவு -ஆசைகள்

நினைபதெல்லாம் கிடைத்து விட்டால்
நிணைவுகள் எதுவும் தேவை -இல்லை
*****************************

இதயம்
உன் இதயம் இதயம் -பறக்கிறதோ ?
அது -எங்கோ போகிறதோ ?
நிழலாய் நிழலாய் உன்னிடமோ
இப்போ இருகிர்றதோ ?

பரபதையோ பிடிப்பது யார்
உனக்கோ தெரிகிறதோ?
உன்னிடமோ இருப்தையோ
பறிப்பதுவோ யார் யாரோ ?

இதயமோ இருபதோ ஒன்றுதான்
அதன்னுள்லோ கலப்பதுவோ
எத்தனை எத்தனை உயிர்களோ ?

நட்பென்றும் உறவென்றும்
இதயத்தை பறிப்பதும் அன்பலே
நமக்கே நமக்கே தெரியாது
நம்மை நேசிக்கும் உயிர்கள் எதுவென்று

அறிந்து நேசிகும் உயிர்கள் பலவென்றால்
அரியாது நேசிகும் உயிர்களும் பல இருக்கும்
நம் இறப்பினில் தெரியும் நிஜம் எல்லாம்
நம்மை நேசித்த உயிர்களின் -விழிகளில்
பெருகும் கண்ணீர் துளிகளில்

அர்ரூபமாய் அதை கண்டோ
நாமும் ஆனந்தம் அடைந்திடுவோம்
பறந்திட்ட இதயமதுவோ
பல நல்ல இதயங்களில் கலந்தது -என்று
******************************************************

செவ்வாய், 11 ஜனவரி, 2011

puthukavithai

நட்பு
ஏக்கமாய் ஒரு பார்வை
அன்பாய் ஒரு கண்டிப்பு
பாசமாய் ஒரு எதிர்பார்பு
நட்ப்பாய் பல கண்டிப்புகள்

செல்லமாய் பல திட்டுக்கள்
சொல்லாத சில உதவிகள்
மறக்கும் போது சுட்டிகாட்டுதல்
மறக்காமல் இருக்கும் அன்பை பொழிதல்
எல்லாம் நட்பின் நயனங்கள்

எங்கிருந்தோ நாம் இங்கு நட்பானோம்
நலம் விசாரிதலும்
நட்பை விரிவு படுத்துதலும்
வலை பிண்ணலாய் பிணைகிறது -பல
நல்ல நட்புகளும் இங்கு பூக்கிறது +சந்தோசமாய்
Sent at 7:59 PM on Tuesday
latha: *****************************
சிரிப்பு
சிரிப்புக்கு ஓர் அடியாம்
சிந்திக்கும் அடி மனதாம்
எல்லை வகுக்கும் ஓர் நிலையாம்
எல்லாமே இன்பம் எனும்மாம்
எண்ணுகையில் துன்பம் இலையாம்

நகை சுவையே நாடி எனுமாம்
நாம் ரசிகையிலே சிரிப்பு வருமாம்
************************
பெண்
பெண் எனும் புத்தகம்
முழுதும் படித்து அறிந்தாரும் இல்லை
இவள் இப்படிதான் என அறிதிட்டு
கடைநிலை கூறுவாரும் இல்லை
*****************
புத்தாண்டு
புதுமைகள் மலர
புன்னகைகள் விரிய
பூவினங்கள் மலர
பெண்ணினங்கள் சிரிக்க
ஆனினங்கள் முளிக்க
புத்தாண்டெ நீ வருக வருக
*************
உயிர்

பிறப்பென்னும் பூ உடல்
பூமியை தழுவ பூமி மாதா
சுமையை தாங்க உயிரினம் ஜீவிகிறது

உடலோ பலவிதமாகினும்
குணங்களோ பலவிதமாகினும்
எண்ணங்களோ பலவிதமாகினும்
உயிர் மட்டும் ஒன்றுதான் எல்லோருக்கும்

உயிர் எனும் காற்று போனலோ
ஜடமாகிய பிணம்தான் உடல்

அந்த உயிர்த்த உடலுக்குத்தான்
எத்தனை எத்தனை ஆசைகள்
எத்தனை எத்தனை கனவுகள்

அனைத்தும் அடைந்தோர் யாருமில்ல
அடைய முயற்சித்தாலும் தேடுதலும்
மனித ஜீவிகளின் கடைவரை நிலை

அர்ரம்பம் உண்டு எனினும்
முடிவு என்பது இல்லை -உய்யிர்தலுக்கு
******************************
Sent at 8:03 PM on Tuesday
latha: நட்பு
நட்பு எனும் வீணை மீட்டின்
சுருதி சேரும் இசை போல்

அபஸ்வரமாய் தீய நட்ட்பும் கூடும்
தேன் இசையாய் நல் நட்பும் கூடும்

இசையாய் நட்ப்பை ரசித்தால்
அபச்வரமும் தேன் இசையும்
ரசிக்கத்தான் வேண்டும்

பிடிக்காத இசையாய்
பிடிப்பில்லாமல் மறந்திடல் வேண்டும்
***********************
காதல்
காதலும் ஒரு இசைதான்
ரசிக்க ரசிக்க இன்பம்

பெண்கள் ஓர் இசைதான்
காதலித்து பாருங்கள்
முடிவில் சங்கு சத்தம் கேட்க்கும்
************************
நெட் நட்பு

சின்னதாய் ஓரு ஹாய்
நட்ட்பாய் ஏற்றுக்கொள்ள்

நட்ப்பானதுவும் ஓரு ஹாய்
புன்னகையுடன் பேச ஆரம்பிக்க

மெல்ல மெல்ல பூ போல் விரிந்து
நேசமாய் ஓரு நட்ப்பாய்
பாசமாய் ஓரு நட்ப்பாய்
அன்பாய் ஓரு நட்ப்பாய்
சகோதரதுவமாய் ஓரு நட்ப்பாய்
தாயாய் ஓரு நட்ப்பாய்
சேயாய் ஓரு நட்ப்பாய்
மனம் போல் ஒட்டி கொண்டு
மனம் திறந்து நட்புக்களிடம்
சுக துக்கங்களை பகிர

சில நட்புக்கள் நட்புகளில் தொடங்கி
மனங்கள் கலந்து காதலாகி
கல்யாணத்தில் முடிவதுவும் உண்டு

சில நட்புக்கள் மனம் முறிந்து
பகைமையில் முடிவதுவும் -உண்டு

நெட் நடப்போ ஓர் பூகோளம்
சுற்றி சுற்றி நட்புக்கள் மாறுகின்றன

இங்கு ஆதிமுதல் முடிவுவரை
தொடரும் நட்புக்கள் அபூர்வமானது

இதில் பார்வையாளர்களாக -பல
நட்புகள் உண்டு பொம்மை போல் பேசாது

நெட் நட்புக்களோ புன்னகையாய் பூத்து
புஸ்வானமாய் மறையும் -ஓர்
தொலைதூர கானல் நீர்தான்
**************