வெள்ளி, 8 ஜூலை, 2011

அன்பு

அன்புக்கு இல்லை தடை ஏதும்
ஆசைக்கும் இல்லை தடை ஏதும்
பண்புக்கும் இல்லை தடை ஏதும்
பாசத்துக்கும் இல்லை தடை ஏதும்
அத்தனையும் அடங்கிய ஓரு சொல் -அன்பு

பொறாமைக்கும் உண்டு தடை -*எப்போதும்
போட்டிக்கும் உண்டு தடை -*எப்போதும்
பொல்லாப்புக்கும் உண்டு தடை -*எப்போதும்
இவையும் தடுக்கும் ஓரு சொல்-அன்பு
*********************************
இதயம்

உன் -இதயத்தில் அழகி இருந்தாலும்
இல்லை-ஓராயிரம் அழகிகள் குடிவந்தாலும்
எனகென்று ஓர் இடம் -இருக்கும் -அது
உன் உயிர் உனைவிட்டு பிரிந்தாலும்
நினைவுகளாய் தொடரும் உன் -ஆவியுடன்

உன் - இதயமெனும் கூட்டுக்குள் இல்லாத
நினைவுகளாய் நான் மறைக்கப் பட்டாலும்
உன் -உயிர் எனும் துடிப்புகளில்
நிலையில்லாமல் துடிப்பது -புரியும்

நீ மறைத்தாலும் மறுத்தாலும் மறந்தாலும்
உன் -ஓய்வொரு துளி நினைவுகளும்
என்னுடன் என் நினைவுகளுடன் என புரியும்

இதம் என்பது குட்டி குடுவை -அதில்
கொட்டிகிடக்கும் உணர்வுகளோ எல்லையில்லாத -வானம்
**********************************
காத்திருத்தல்

காத்திருந்த நேரமத்தில்
கனவுகளும் கரைந்து போக

எதிர் பார்த்த உயிர் -அதுவோ
எட்டிநின்று விளையாட -காத்திருந்த
உயிர் அதுவின் கடைவிழியில்
கண்ணீரோ உருண்டோட
ஓரு துளியும் சிந்தாது
விளியதுவோ உள் வாங்க
**************************
எந்திரம் இல்லை நீ

கருக்கலிலே கண் விளித்து
கடமை செய்திட கருத்தாய் கிளம்பி
காட்டையும் மேடையும் கடந்து
கரும்புகாட்டையும் தென்னதோப்பையும்
கூலிக்கு ஆள்பிடித்து நீயும் அவர்களுடன்
களைப்பின்றி வேலைதனை செய்தாலும்

இரவுவரை ஓய்வின்றி உழைத்தாலும்
உணகென்று ஒர் ஆசையும் இல்லையோ?
மனிதன் என்றால் மனமும் ஆசைகளும் உண்டு
நீயோ - எதையும் எதிர்பார்காது
ஆசைக்கு இடமின்றி அபூர்வமாய் போனாய் ?

ஓயாது உழைக்கும் இயந்திரத்திற்கும்
பழுது என்று ஓய்வு கிடைக்கும்
நீயோ -ஓய்வின்றி உழைக்கிறாய் ஏனோ?
படுத்தும் தூக்கம் கவலைகளுக்கு டாட்ட ஏனோ?

நண்பா நீ மனித உயிர்
உணகென்ற ஆசைகளும் உணர்வுகளும் -உண்டு
அதனை உன்னுள் புதைத்து கொள்ளாதே -நீ
இயந்திரமாய் மாறி விடாதே -நீ

உணகென்று வாழவும் பழகு
உனக்குள் ஆசைகளை விதைத்து கொள்
இயற்க்கையையும் இசையையும் ரசி
உணவை ரசித்து உன் உணர்வுகளுக்கு
உன்னதமான உயிரோட்டம் கொடு -நீ
மனிதராய் பிறக்க மாதவம் செய்தடல் வேண்டும்
என்ற பாரதியின் கூற்றுக்கு உயிர் கொடு
உண்னை நீ மதி விதியை நினைத்து
மதியை இழக்கதே இயல்பாய் இரு -நீ
எப்போதும் இயந்திரமாய் இருக்காதே
***************************
மனமே

உணகென்று பல மனம் துடிக்க
உன் -வரவுக்காக காத்து கிடக்க
சுக துக்கங்களை பகிர நினைக்க -நீ
உன் மனம் மட்டுமே போதுமென்று
உன்னில் உண்னை புதைகாதே

உண்னை பாராது ஏங்கும் மனங்களோ
உண்னை கானது விழியோரத்தில்
கண்ணீர் துளிகளுடன் காத்திருப்பதை அறிவாயோ ?

உண்மை அன்புக்குள் சண்டை வேண்டாம்
புரிதல் அவசியம் ஒருவருக்கு oruvar
vittu கொடுத்தல் உண்மை அன்பு

சின்ன சின்ன ஊடலும்
சிங்கார சிரிப்பும்
சிறுபிள்ளை தனமான சண்டையும்
உண்மை அன்பில் சகஜம்

என்னதான் கோபித்தாலும் -உன்
வரவை ea ea ஈதிர் நோக்கும் -உன்
அன்பு மனதை எப்போதும் மறைக்காதே
**************************
உழவரே

உழவரே கடும் உழைபாளியே
மரமோடு மரமாக மாறிவிடாதே
உன்னுள் இருக்கும் மனித மனதை
கொன்று விடாதே-நீ
மனிதனாய் பிறந்தது ஓரு ஜென்மம்
நீ - மீண்டும் மனிதனாய் பிறக்க நினைத்தால்
அது - மறு ஜென்மம்
இருக்கும் ஜென்மத்தில் முழு மனிதனாய் வாழ்
உன் உணர்வுகளுக்கு மதிபளி
ஆசைகளுக்கு சந்தோசம் கொடு
********************************

நட்பு

தாம்பத்தியம் பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

பாசம் பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

உறவுகளை பிரிந்தாலும்
மறந்துவிடும் மனங்கள்

ஆனால் -நட்பை பிரிந்தால் மட்டும்
மறக்க மறுத்துவிடும் நம் -மனங்கள்
*************************************
நட்ப்பு

நம் கண்விட்டு எப்போதும்
நீரும் மறையலாம்
நிலமும் மறையலாம்

உறவுகளும் மறையலாம்
பிரியங்களும் மறையலாம்
பிரிவுகளும் மறையலாம்
ஆனால் -கனவிலும் நிழலிலும் நினைவிலும்
மறையாதது நட்ப்பு மட்டுமே
*********************************
பிறப்பு

பெண்ணாய் பிறத்தலும் பாவம்
ஆனாய் பிறத்தலும் பாவம்
பிரியங்களும் ஆசைகளும்
அடங்கா நினைவுகளானளும்
எல்லாமும் அடைதல் கஷ்ட்டம்

மிருகமாய் பிறந்தால் இன்னும் கஷ்டம்
நிரந்தரமில்லா மாறும் அன்பு நிலை

இம் பறவையாய் பிறந்தால் பாவம் இல்லை
ஜோடியாய் திரியல்லாம் உண்ணலாம்
ஒன்றாகவும் இறக்கலாம்
சிக்கல் இலாத காதல் இனங்கள்
***************************************
மனம்

என் -மனமோ என்னிடம் இல்லை
அது -இருக்கும் மனமோ என்னை
நினைத்து பார்ப்பதும் இல்லை

என் -நினைவுகளும் என்னிடம் இல்லை
என் -நினைவுகளில் இருபவரோ
என்னுடனும் இல்லை

விதியோ வினையோ என்னால் -என்
நினைவுகளை ஒதுக்கவும் மறக்கவும்
முடியவில்லையே இறைவா நான் என் செய்யா?
உயிர் அன்பு என்பதும் இதுதானோ -இல்லை
நினைவுகளால் உயிர் விடும் அன்பும் இதுதானோ ?

பட்டாம் பூச்சியாய் மனம் அலை பாய்ந்தாலும்
கடல் அலைபோல் மனம் ஓயவில்லையே?
குருவிபோல் என் நினைவுகளை சேர்தாலும்
குரங்குபோல் மனம் தாவுகிறதே/?

இனி எனக்ககவும் வாழ்வதும் வீண்
பிறர்க்காக வாழ நினைபதுவும் வீண்
நான் வாழ்ந்ததும் போதும்
வாழ நினைத்ததும் போதும்
என்னை உன்னிடம் தஞ்சம் கொள் இறைவா

திக்கற்றோர்க்கு இறையே துணையாம்
உன் பாதமே சரணம் என்று பட்றுகிறேன் -இறைவா
நீயாவது எனை மனமுவந்து ஏற்றுகொள்
பாவம் என்ற இரக்கத்தால் -என்
பிறப்பு புனிதமடையும் சந்தோசமாய்
****************************
மனம்

நீ விரும்பும் மனமோ
உண்னை -விரும்பவில்லை
உண்னை விரும்பும் மனதையோ
நீ - ஏற்கவும் இல்லை
காதுகிடப்பதை விட -நீ
உன்னக்காக காத்திருக்கும் மனதை ஏற்றுகொள்
உன் -வாழ்வு உனக்கு சொர்கமாகி போகும்
உனக்கு எப்போதும் சந்தோசமே
********************************

திருமண வாழ்த்து

இளகிய மனம் படைத்தவளே
இல்லத்துக்கு இனிமை சேர்பவளே
பெற்றோரும் உற்றாரும் உறவுகளும்
உளமார போட்றுபவளே

என் -அன்பு தோழியே
நட்பிற்கு இலக்கனமனவளே
தோள் கொடுத்து தொல்லைகள் தீர்பவளே
நன்மை தீமை உணர்ந்தவளே
நாலெல்லாம் சிரித்தபடி
இன்முகம் காட்டு பவளே

திருமணம் எனும் பந்தத்தில் இனைபவளே
இல்லறத்தில் நல்லறம் காட்டி
குலமகள் குணமகள் இவள் -என்று
குடும்ப்பம் போற்ற வாழவும்
என் -தோழியே அம்பிகா தேவியே
செல்வத்திற்கு ராஜாவாம் உன்னவர்
செள்வரசுவின் கரம்பிடித்து

ஈருயிரும் ஓர் உயிருமாய் கலந்து
இல்லறமெனும் படகேரி
இயற்கை என்ற வாழ்வை ரசித்து
தேன்உன்னட வண்டுகளாய்
தாம்பத்தியத்தை சுவைத்து

வாழையடி வாழையாய் பரம்பரை நிலைக்க
பிள்ளைகுட்டி பெத்து போட்டு
நன்மக்களாய் அவர்களை வளர்த்து
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
எனும் பெயருக்கு உன் இல்லறமே
உதாரண மெனும் பெயர் பெற்று
என்றும் நீடூடி வாழ்க என வாழ்த்தும்
உன் -அன்பு தோழான் ஆதி
என்றும் அன்புடன் நட்புடன்
************************************

திருமண வாழ்த்து

புன்னகையால் தினம் பூபவளே
பூஞ்சிரிப்பை மத்தாப்பாய் சிதரவிடுபவளே
பார்வையால் அனைவரையும் கவர்பவளே
உன் கண் பட்டால் கல்மனனும்
கரைந்து அன்பை பொலியுமே

முத்துக்களாய் சிதறும் -உன்
வார்த்தைகள் அத்தனையும் -மனதில்
பதியும் பசும்மரத்தில் பதியும் ஆணிபோல்

பெண்ணிற்கு இலக்கனமனவளே
பொறுமைக்கு பெயராநவளே
அன்பிற்கு அணிவகுபஅவளே -உன்
அன்பால் அனைவரையும் அடிமை கொள்பவளே

என் - அன்பு தங்கை சிவசங்கரியே
கௌரிசங்கர் எனும் காளையை மணந்து
திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து
****************************************************
அன்பு

ஏங்கிய நினைவும்
எதிர்பார்த்த அன்பும்
எட்டி பார்க்காத நட்பும்
மறைந்து போகாது
மறைந்து நிற்கும் நினைவுகளா?
***************************

கருத்துகள் இல்லை: