வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

வேதனை

எண்ணிரண்டு பதினாறு வயதில்
எண்ணிய என்னமெல்லாம்
எழுத்தாணி வார்த்தையாய்
மாறியதும் ஏனோ?ஏனோ ?

ஆசைப்பட்ட வாழ்க்கை அதோ
அட்ச்சாணி முறிந்த வண்டியாய்
நிலை தடுமாறுவதும் -ஏனோ ?

அன்பாய் இருந்தும் ஆசையாய் இருந்தும்
அரவணைத்து ஆறுதல் சொல்ல யாருமில்ல
பந்தம் இருந்தும் சொந்தம் இருந்தும்
சொல்லி அழவோ யாரும் இல்ல
***********************
காதல்
ரசிபதெல்லாம் காதல்
பிடித்ததெல்லாம் காதல்
நேசிபதெல்லாம் காதல்
அறிந்ததெல்லாம் காதல்
தெரிந்ததெல்லாம் காதல்
ஒருவருக்கு ஐநூறு முறை காதல் வருமாம் -உண்மையோ?
*************************
புரிதல்

காடும் நிலையில்லாது
வீடும் நிலையில்லாது
நிற்க நேரமும் இல்லது
மனையும் நினைவில்லாது
மனைவியும் நினைவில்லாது
மனம் போன போக்கில் போனாலும்
என் மனம் ஒன்றை அறிவது யாரோ -இறைவா
*********************************

மூலிகை மருந்து

மாமனை நீ நினைகவில்ல
அதனால் எனக்கு மனம் சுகமில்லை
எந்த மூலைக்கு போனாலும் -என்
மூளை சரியாக எந்த மூலிகை வேனுமோ?

எம் மூலை போனாலும் -உன்
உன் நினைவே என் மூளையில்

உன் மடியில் தலை சாய்த்தால்
மொத்தமாய் எல்லாம் மறந்திடுமோ ?
உன் நினைவே நானாகி கலந்துதான் போவானோ ?
அதையும்தான் சரி என்று
செய்துதான் பார்ப்போமோ -என்
அன்பு கண்மணியே
**********************

நட்பு
நட்பை மறக்க நான் ஒன்றும்
அரசியல்வாதியும் இல்லை
உலகறிந்த பெரும் புள்ளியும் இல்லை
சாதாரண பெண் அன்புக்கும் நட்புக்கும்
இலகனமாய் திகழ விரும்பும்
அன்பான நட்பு விரும்பி
*********************
ஓவியம்

எழுதோவியம் உண்டு
தூரிகை ஓவியம் உண்டு
வண்ண ஓவியம் உண்டு
கோல ஓவியமும் உண்டு
எத்தனையோ வகை உண்டு ஓவியத்தில்
எந்த ஓவியமும் -உன் -
எழில் ஓவியத்திற்கு ஈடு உண்டோ - அழகியே
************************

ஆசை

நட்பை காண ஆசை என்றேன்
தொலை நோக்கியில் வலைத்தளத்தில்
நேரில் வருகிறேன் enகிறாய்
நடப்பதை சொல்
நடக்காததை சொல்லாதே தோழா
கடைசியில் தொல்லையில் முடியும்
உன் ஆசை உனக்கு இல்லை எனக்கு
*************************
கருப்பு + வெள்ளை = சூப்பர்

வெண் மேகத்தில் பிரகாசிக்கும்
சூரியனின் ஒளியின் அழகை விட

அந்திசாயும் இருளின் ஒளியில்
மின்னலாய் ஜொலிக்கும் நிலவின் ஒளி -அழகு

ஆயிரம் வண்ணங்கள் இருந்தாலும்
அதில்-அழகு சேர்து தனித்து தெரிவது கருப்புதான்

கண்ணனுக்கு தெரியும் கவர்சி எல்லாம்
கண்கொண்டு ரசிக்கத்தான் -ஆனால்
காலத்தால் அழிந்து விடும்

ரசிக்கமுடியாத கோலங்கள் எல்லாம்
காலத்தால் அழியா கல்வெட்டாய்
மாறுவதும் உண்டு சரித்திரத்தில்

வெண்மைக்கு கருமை அழகு
கருமைக்கு வெண்மை அழகு
தனித்து அழகு தருவதை -விட
இவை இரண்டும் கலந்த அழகு தனிதான்
******************************
முத்தம்
கவிதை எழுதிய கைகளுக்கு
முத்தம் ஒன்று தர பாவை
ஒருத்தி விளிக்க் -அவள்
அழகில் மயங்கிய பேராசை கவினனோ
ஆசையாய் அழக கரமும் நீட்ட

வெட்கமாய் இருக்கிறது கண்களை மூடவும் -என
அவள் விழித்ததுவும் இவன் அடிபணிய
முத்தமிட்ட அவளோ மின்னலாய் -மறைய

முத்தத்தின் ஈரத்தால் மெய்மறந்த அவனோ
சில நிமிடம் கழித்து கண் விளிக்க்
வாய்விட்டு அலறினான் - அவனோ

ஓரு அழகியின் முத்தத்திற்கு ஆசைப்பட்டு
மொத்தமாய் வாழ்நாளில் சம்பாதித்த
கையில் இருந்த ஓரு மோதிரமும் கானம் என்று

உசாறு உசாறு முத்தமிடுகிறேன் என்றாலே
நம்மை மொத்தமாய் கவிழ்க்க போகிறார்கள்
என்று அர்த்தம் சபலங்களை தவிர்க்கவும்
மனிதர் குல மாணிக்கங்களே
**************************
தொப்பை

வித விதமாய் உண்டு
வில்லங்கமாய் பெருத்தாலும்
இதுக்கும் ஓரு அழகு -உண்டு

பின்னலில் குழந்தைகள் தலைவைத்து உறங்கவும்
பேர பிள்ளைகள் சறுக்கி விளையாடும்
ஆனந்தமும் கிட்டும் -இல்லாத
ஒட்டிய வயிற்றிக்கோ இப் பாக்கியம் கிட்டா
*************************
உறவு
தெருவிளக்கு
நான் தலை சாய்ந்து நிற்கிரேன் வெட்கப்பட்டு
யாரையும் முகம் பாராது -ஆனால்
எல்லோரும் தலை நிமிர்ந்து நடப்துவோ
தம் எண்ணப்படி உருவங்களை பார்த்து ரசிக்க
என் ஒளியின் உதவியால்
**************
கவிதை
கவிதை சொல்கிறேன் என்றாய்
காத்திருந்த கவிதைக்கு
சொல்லாமலே\ போகிறாய்
கடுக்காய் கொடுத்துவிட்டு
************************

கோபம்

காத்திருப்பது என்பதோ
பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபமோ

காத்திருந்து காத்திருந்து
கண்களும் மனமும் எரிவதுதான் -மிட்சமோ ?

சிறு புன்னகைக்கு சிலமணி நேரமும்
சில வார்த்தைகளுக்கு சில நாளும்
சில ஊடலுக்கு சிலா வருடங்களும்
காத்திருபதுதான் பெண்களின் விதியோ ?

காத்திருக்க செய்பவருக்கோ
கவலையில்லை சிறிதும் -எப்போதும்
காத்திருபவளை நிணைத்து

சிந்தனையில் சில மையில் தள்ளியே -எப்போதும்
தான் பொழுது போகாத பொழுதில் தான்
காத்திருபவரின் நினைவோ சிந்தையில் தோன்றும்
பெண்தானே ரோசம் ஏது -எப்படியும்
நம்மை கண்டதும் கோபம் மறையும்
என்ற ஓரு தீராத நம்பிக்கை என் செய்ய
உண்மையில் பெண் ஜென்மங்களோ
அன்பில் உருகும் மெழுகுகள் தானே
பொல்லாத கோபமோ முகம் பார்த்ததுவும்
மாயமாய் மறைந்து புன்னகைகிர்றதே
**************************

திருமண வாழ்த்து

என்னமிரண்டும் ஒன்றாய் கலந்து
எண்ணில்லா இன்பம் பார்த்து
எண்ணியதை இனிதே பெற்று
ஏக்கமில்லா வாழ்வை வாழ்ந்து
மூன்று அரை கழுதையின்
வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும் -இன்னும்
ஒன்பது கழுதையின் வயதை அடைந்து
உன் இல்லறம் சிறந்து நல்லறம் பெற்று
இனிது இனிது என்று இனிமையாய் -வாழ
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே
**************************

காதல் (2)
முதல் வகுப்பில் படிக்குதாம்
அன்ன கற்று கொடுக்கும்
ஆசிரியைக்கு முத்தமிட்டு
ஐ லவ் சொன்னானாம் ஓரு சிறுவன்
இது உண்மையில் நடந்தது

நான்காம் வகுப்பு மாணவனாம்
பக்கத்துக்கு வகுப்பு பெண்ணிற்கு
கொடுத்ததுவோ காதல் கடிதம்
எழுதியதோ உன்ன ரொம்ப பிடிசிருக்கு
உனக்கு என்ன பிடிசிருக்கா
அடித்து கேட்டால் நமக்கு பிடித்தவருக்கு
நம் ஆசையை சொல்லணும் -என்று
அம்மா சொன்னத சொல்லிட்டான்
-இது -குழந்தை காதல்

பக்கத்துக்கு வீடு பெண்ணுக்கு
படிக்கும் புக்கில் கொடுத்தான் -ஓரு
கடிதம் நாம் ஓடிபோலாம -காதலிப்பது
தெரிந்தால் கொலை விழும் என்று
இது பருவ காதல்
புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் -மனம்
ஆசையால் அலைபைவதால் வருவது


பென்பிரிவு ஆண் பிரிவில் தனித்து
படித்தவர்களுக்கு ஒன்றாய் படிப்பது
ஒரே கொண்டாட்டம் கல்லூரியில் நட்ட்பாய்
கலந்து பழகஹும் சந்தோசம்
அதில் பல நட்புக்கள் காதலாகி போவதுவும் -உண்டு
இது அறிந்து புரிந்து வரும் காதல்

போகும் இடங்களில் பார்போர்ரை பிடித்து
பழகி மனதுக்கு பிடித்து வரும் காதலும் -உண்டு
பணி செய்யும் இடங்கள்ளிலும் பழகி
மனதிற்கு பிடித்து காதலிப்பதும் உண்டு
இத்தனை காதலும் அகராதியில் ஏற்க்கபடுகிர்றது
உண்மை காதல் என்று

அகராதியில் மறுக்கப்படும் காதலும் உண்டு
திருமணம் ஆன ஆணும் பெண்ணும்
மனதை பிறர்பால் பறிகொடுத்து
செய்யும் காதல் கள்ளகாதல் -இது
சமூகத்தில் விமர்ச்சிக்கபடும் சர்ச்சை காதல்
காதல் என்ற சொல்லுக்கு கலங்கமானது -இது

பார்த்துகாதல் பார்க்காதகாதல்
பிடித்தகாதல் பிடிக்காதகாதல்
சொல்காதல் செல்காதல்
நெட்காதல் டீவிகாதல்
அடீங்கப்பா காதலில் எத்தைனை வகை
இந்த காதல் எல்லாம் பிரியும் வாய்ப்பு உண்டு -அதிகபட்சமாய்

ஆனால் -ஒருவரை ஒருவர் பார்த்து
பெரியோர்களால் நிட்ச்சயிக்கபட்டு
திருமணம் ஆகி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட
நேசித்து செய்யும் காதல் என்றும் அழிவில்லாதது
இதில் பிரிவு என்று வந்தாலும் -எப்போதாவது
சேரும் வாய்ப்பு உண்டு

காதல் என்பது ஒருவரை மட்டும் நேசிப்பது
இதற்கு புரிதலும் விட்டுகொடுத்தலும் முக்கியம்
************************************
காதல்

ஒருவரை மட்டும் ஒருவர் நேசிப்பது
உண்மை காதல்
ஒருவரை விட்டு ஒருவர் பிரிதல் என்றால்
இருவரும் மரணிப்பது
உண்மை காதல்-இது
இன்று காலம் கடந்த காதலாகி போனதுவோ ?

இன்று -பார்த்ததுவும் ஓரு ஹாய்
மாலையில் காபிசாபிடலமோ -என்று
அன்பான ஓரு அழைப்பு
இருவரும் பேசியதும் -நம்
இருவருக்கும் ஒரே ரசனை சிந்தனை
இருவரும் காதலிக்கலாம் -என்று
தீர்மானித்து தினம் கடலை போடுதல்
பிரசினை வந்து பிரிவு வந்தால்
நட்பாய் பிரிவோம் என்று பிரிதல் -இதுவும்
இன்று காலம் கடந்த காதலாகி போனதுவோ ?

தற்போது பார்த்ததுவும் பிடிகிறது
ஊரை சுத்தாலம் என கிளம்பி
சினிமா ஹோட்டல் பார்க் -என
சுத்தியதும் காசும் காலி -நீ
ஆளும் காலி உண்னை பிடிக்கலை -இன்று
மறுநாள் புது காதலர்களுடன்- சுத்தும்
காதலாவதோ இன்றைய காதலின் -நிலைமை

காதலுக்கும் மரியாதை இல்லை -இன்று
காதலிப்பவர்களுக்கும் மரியாதை இல்லை -இன்று

ஆதிகம்மான kaathal
****************************

காதலர் தினம்

நட்பாய் மலர்ந்து
அன்பால் விரிந்து
மனம் இரண்டற கலந்து
கொண்டாடுவது காதலர் தினம்

காதலர்களாய் இருந்து
அன்பில் சலனம் கண்டு
மனத்தால் பிரிந்து
எட்ட நின்று ஒருவரை ஒருவர் கவனித்து
மற்றவர்களுடன் கொண்டாடுவது
நண்பர்கள் தினம்
ஹ ஹ இப்ப இதான் அதிகம் நடக்குது
*************************

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

நட்புக்கள்

முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
ஆனால் முகவரி தேடாது
முகம் பார்த்ததுவும் சிரிக்கும்

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
ஆனால் ஆதாயம் தேடாது
ஆதரவாய் அரவனைகும்

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
ஆனால் பாசத்தை மறந்தவை
பல்லிளிதும் பாசம் போல் நடிக்கும்
பாசாங்காய் பற்றி கொள்ளும் நட்பவை

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்
நம் கஷ்டம் சொல்லாமலே -அறிந்து
நமை தேடிவரும் உண்மைகள் அவை
அவற்றின் விழியோரம் துளிரும்
சில துளி கண்ணீரில் அரியலாம்
நட்பும் இதுதான் உண்மையும் இதுதான் -என

**************************************

உறவுகள்

இதயத்தில் எழுதின உறவுகள் என்றும்
மறக்கப் படுவதும் இல்லை
மரிக்கப் படுவதும் இல்லை
உயிர் உள்ள வரை தொடரும்
உண்மை நட்பு

ஆனால் உயிருடன் கலந்த நட்புக்கள்
உயிர் மரித்த பின்னும்
ஆவியுடன் தொடர்பவை மேலோகத்திலும்

பூலோகத்தில் உள்ள உண்மை நட்புக்களோ
மரித்த நட்பை தான் ஆவி பிரியும் வரை
பார்க்கும் பூக்களிலும்
பேசும் நபர்களிடமும்
உறவுகளிடமும் நிணைவு கூர்ந்து
நட்பின் பெருமையாய் உணர்த்திவிடும்

நட்பிற்கு இலக்கணம்
குற்றம் செய்தால் தடுப்பது
நன்மை செய்தால் துணை போவது
உண்மைக்கும் பொய்மைக்கும்
உறுதுணையாய் நின்று நட்பை காப்பது

*********************************************

அழகு

பிறர் அழகை ரசிக்க
ஆழகு தேவையில்லை -உனக்கு
கண்கள்மட்டும் போதும்
அவள் பார்கிறாலோ இல்லையோ
உண்னை- என்று தெரியாத போது

உன் இதயத்தை நேசிக்க
அவளிடம் இதயம் இல்லையோ -இல்லை
ஏர்கனமோ வேறு ஒருவரால்
அவள் இதயம் பரிகபட்டு விட்டதோ
யார் அறிந்தார் பராபரமே
**********************************

விடியல்

தினம் விடியும் விடியல்
விடிவெள்ளியின் முகத்திலும்
குளுமையான தென்றலின் தழுவலும்
இனிமையான குயில்லோசையும்
காக்கை குருவிகளின் இரைசலும்
ஆடு மாடுகளின் கத்தலும் காதலுமாய்
இனிமையாய் விடிவதோ உழவனின்
தினம் விடியும் பொழுதுகளோ

*************************
உண்மை

இருப்பதை விட்டு இல்லாதததை
தேடும் வாழ்க்கை இயற்கையாய் வீசும்
தென்றலை விட்டு தொலை தூர
வசந்தத்தை தேடி ஆலைவது
பேன் காற்றை சுவாசிப்பது போல்
***************************

நட்பு

உறவாக இல்லாவிட்டாலும்
உயிராக நான் இருந்தால் -உண்னை
உயிராக நேசிகும் உயிருக்கு ஏமாற்றம் நட்ப்பே

மறு பிறவி என்று இருந்தால் -அதில்
எந்த உருவாக இருந்தாலும்
உன் அருகே இருந்து உயிர்
உன் அருகே இருந்து உயிர் துறக்கும்
பாக்கியம் வேண்டி இறைவனை துதிகின்றேன்
உனக்காக உன் -நட்புக்காக

****************************

நிணைவுகள்

பார்க்கும் இடம் எல்லாம் உன் -உருவம்
நீ எங்கே நீ எங்கே இருகின்றாய்யோ ?
வருவாயோ வருவாயோ என் அருகே
நீ -வருவாயோ வருவாயோ என் உயிரே?

உட்சிபார்க்கும் மலை முகட்டிலும்
தெரிவது உன் -முகமே முகமே

தரை பார்த்து வெட்கித்தாலும்
நிழலாய் தெரிவதும் உன் -முகமே முகமே

தலையசைத்து அசையும் மரம் செடிகளின்
அசைவிலும் உன் -முகமே முகமே

பூக்கும் பூவின் விரிதலிலும்
உன் முகமே உன் முகமே

புன்னகைக்கும் குழந்தையின் சிரிப்பிலும்
உன் -முகமே உன் -முகமே

சுட்டு எரிக்கும் சூரியனின் ஒளியிலும்
மின்னுவதும் உன் முகமே உன் முகமே

இருட்டில் மின்னும் நிலவின் ஒளியில்
கண் சிமிட்டுவதும் உன் முகமே உன் முகமே

தழுவும் தென்றலிலும்
உன்நினைவே உன்நினைவே

தூறும் சாரலில் பொழிவதும்
உன்நினைவே உன்நினைவே

கொட்டும் பணியிலும்
கொள்ளை போகும் குளிரிலும் -எப்போதும்
உன்நினைவே உன்நினைவே

எங்கோ கண்ணனுக்கு தெரியாது
எட்டா தூரத்தில் இருக்கும் உயிரே

உண்மை அன்பு என்பது நிஜம் எனில்
என்றாவது உண்னை பார்திடுவேணோ ?

இந்த ஜென்மத்தில் என் நிணைவுகள்
என்னருகே இருந்து -நான்
தொட்டு பார்க்கும் பாக்கியம்
கிட்டா விட்டாலும் எட்ட நின்று
கண்ணால் பார்க்கும் சந்தோசமாவது
ஒருமுறை எனக்கு கிட்டுமோ -இறைவா
*************************

ஆசை

கொட்டி கிடக்கும் கொள்ளை அழகே-உண்னை
வாரி அணைத்து முத்தமிட்டாலும்
தடவி கொடுத்தாலும்
அடித்தாலும் பிடித்தாலும்
என்னவளின் -முகம்
கருத்து போகிறது நான் -உன்
வெள்ளை நிறத்தில் மயங்கிவிட்டேன் -என்று
நிஜம் அதுவல்ல என்ன செய்தாலும் -நீ
பேச மாட்டாய் என் செல்ல பூனையே
***********************
நட்ப்பு

காத்திருக்கும் நேரமத்தில்
காரணமில்ல கோபம் வரும்

பிறகு பயமும் அனுதாபமும்
மனதை அலைகழிக்கு என்ன ஆனதென்று

யோசித்து யோசித்து புரியாது
ஓராயிரம் கவிதை வரும்

அதில் பிரிதலும் காதிருந்ததுவும்
காலத்தின் கொடுமை என்று
காரணம் கற்பிக்கப்படும் நட்பிடம்
*************************