திங்கள், 30 ஆகஸ்ட், 2010

pudhukavithaigal

எழுது கோல்

எழுது கோலை எடுத்தது வைத்து
எழுத்து ஓவியம் படைக்க நினைத்து
பலதையும் சிந்தித்தால் பயம்
எட்டி பார்க்கிறது இது தேவையோ -என்று

மறக்க மறைக்க வேன்டியவற்றை
மாய்மாலம் பண்ணி நினைவுபடுத்தி
நீங்கா துன்பத்தில் மாய்ந்து விடாதா -என்று

மட்டிகள் திருந்த போவதும் இல்லை
புத்திசாலிகள் இதை ரசிக்க போவதும் இல்லை
யாமாறுபவர்கள் திருந்த போவது இல்லை
யாமாற்றுபவர்கள் நிறுத்த போவதும் இல்லை

எழுதுவதை சிலர் ரசித்து படிப்பார்கள்
சிலர் படித்து வெறுப்பார்கள்
எதுக்கு இந்த பொல்லாப்பு -என்று
ஓரு துளி மையால் ஓராயிரம்
செயல்களை செய்யமுடியும் என்றாலும்
அவை நன்மையாய் இருபது எல்லோருக்கும் நலம்

**************************************************************

(1)விடிவெள்ளி முளைக்காதோ ?

விடிவெள்ளி முளைக்கும் முன்பே
கருக்கலில்லே கண் விழித்து
காலத்து மேடு நான் போயி
களை பறித்து காசுவாங்கி
கருவேலங்குச்சி பொறுக்கி வந்து

ஈரவிறகோடு இதை கூட்டி
கண் எரிய கண்ணீர் விட்டு
அடுபெரித்து கோழியடித்து குழம்பும் வைத்து
முட்டையும் ரசமும் சோறும்
பக்குவமாய் சமைத்து விட்டு

ஆத்துலே குளித்து ஈரமுடி தான் உலர்த்தி
தலை வாரி பொட்டிட்டு
தலை நிறைய பூ சூடி -உனக்காக
அலங்காரமாய் வழிமேல் விழிவைத்து -காத்திருக்கையில்
கருவாய என் கனவா எங்கே நீ போனாயோ ?


நான் -கண்டவரிடம் சொல்லி அனுப்பா
விசாரித்து வந்த அவரோ
லாரியில் லோடோடு போன - நீயோ
கள்ள சிருகியுடன் தொடர்பு கொண்டு
அவளை லோடாக்கி மாட்டி கொண்டு
ஊராரின் பஞ்சாயத்தால் மோசகார - நீ
அவளை மணந்து விட்டாய் -இனி
இங்கு வரவே மாட்டாய் என்றுரைத்து போனாரே

பாவி உண்னை நம்பி நான் இருக்க
நடு வீதியில் விட்டு போனாயே
ஆண் என்ற திமிர்ராலே ஆணவமாய் -நடந்தாயோ ?

எண்ற புருஷன் எனக்கு மட்டும்
என்றுரைத்த என்றுரைத்த் என் வார்த்தைதனை
எள் இறைத்தா நீராய் மாற்றி விட்டாயே


(2) மனமும் அன்பும் ஆண்களுக்கு
மட்டும் மாறி போவதேணோ ?
கண்டதெல்லாம் கவர்ச்சி என்று
கொண்டதோ கோலம் என்று போனயோ என் புருசா

உன் போல நான் - இல்லை
ஊரும் உறவும் எனக்கு இருக்கு
உன் -நினைவே உயிராக
உடல் சாயும் நிலை வரையில்
என்கையே எனக்கு துணை -என்று
எண்ணி நானும் நாளும் வாழ்ந்திடுவேன்

என் வயிற்றில் இருக்கும் நம் பிள்ளை
பூமி தொட்டு வளர்ந்து அப்பன் -எங்க
என்று கேட்டாலோ -நீ
உன் -நினைவே உயிராக
பிறக்கும் முன் மரித்துவிட்டான் - என
பொய் உரைத்து பொக்கிசமாய்
அவனை வளர்த்து ஆளாக்குவேன்

நன்றி மறந்த உனக்கு
நாய் பிழைப்பு நிட்சயம் உண்டு
நடுவீதி நீ வந்து உயிர் துறப்பாய் என் புருசா

என் - வாழ்விலும் நீ இன்றி -இனி
தினமும்விடி வெள்ளி முளைக்குமடா
***********************************************

நட்புகள்
பள்ளியில் கிடைத்த நட்புகள்
பேஸி மகிழ பள்ளியில் மட்டும்

வீதி நட்புக்கள் விளையாட மட்டும்
வீதியோடு போனவைகள் -பெண்களுக்கு

உறவில் கிடைத்த நட்புக்கள்
நல்லது கெட்டது நாட்களில் பேசி மகிழ மட்டும்
****************************************
உண்மைகள்

எத்தனை மோசமான மனங்களையும்
நொடியில் கண் கலங்க செய்வது -தூசு

எத்தகைய கொடியவர்களையும் -அம்மா
என -அழைக்க வைப்பது சிறு -முள்

தெரியாதவர்கள் என்றாலும் பார்த்ததும்
நொடியில் பிடித்துவிட்டால்
நட்பு கொள்ள நினைப்பது -மனம்

நட்பு என்று சொல்லி சொல்லி -நாளும்
பொய் உரைத்தால் தாங்காது
உண்மை -தோழமையின் மனம்

அன்பு வேறு ஆசை வேறு என்றாலும்
இவை - இரண்டும் காட்டபடுவது
தோழமை , காதல் ,வாழ்கைதுனையிடம் மட்டுமே

வெறுப்பு வேதனை விரக்தி -இவை
தோல்வியின் முடிநிலை என்றாலும்
வாழ்கையின் முடிவை நிலை நிறுத்துகிறது
எத்தனையோ அப்பாவிகளின் முடிவிற்கு

*******************************

ரிங் கேள்
வட்ட வளையத்தினுள் -ஓரு
வெள்ளை நிலா பெண்
ரிங் கேள்
****************************
வட்ட முகம் (நிலா முகம் )
காம்ப்பஸ்ஸில் வரைந்த வட்டமும்
கண்ணனுக்கு எட்டிய வட்ட நிலவும்
ஈடாகுமோ உன் பிரகாசமான
வட்ட முகத்தின் அழகிற்கு
***************************************
உண்னை பற்றி

நட்பே -உன் புகை படங்களை பார்த்ததும்
உண்னை பற்றி ஓரளவு -உணர்ந்தேன்

பெரிய பொறுப்பில் இருந்தாலும்
சிறுபிள்ளை மனது உனக்கு

வருடங்கள் பல கழிந்தாலும்
இளமையின் நினைவுகளை-மறக்காது
இன்றும் துள்ளி திரியும் மனம் உனக்கு

தனக்கு தானே விளையாடுவதும்
வீட்டுக்குள் சிறு பிள்ளையாய் ஓடுவதும்
வித விதமாய் உடை அணிவதும்
உன் உண்மையான சந்தோசங்கள்

வெளி உலகத்தில் பெரிய மனிதனாய் \
உலாவரும் தருணங்களில் -உன்
சந்தோசங்களை தொலைத்து -பொம்மையாய்
பந்தாவாக வலம் வருகிறாய்

எப்படி எங்கிருந்தாலும் என் நிலையில்லும் -உன்
புண்னகை மட்டும் மாறுவதில்லை என் -தோழமையே
************************************************

கடல்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

சீற்றமும் சீரிபாய்வதும்
ஆர்பரித்து அள்ளிசெல்வதும்
உயிர்கள் என்ற இரக்கமும் இல்லாத
ஆர்பரித்து அள்ளிசெல்வதும்
ஆழகாய் ஆலை அடித்து
குளிர் காற்றை வீசினாலும்

கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும் -இவை
கானல் நீராய் கைக்கு எட்டாது -போனால்
உண்னை தஞ்சம் அடைவோர் எத்தனையோ ?

அவர்களை நீ உன் மடியில் போட்டு
தாலாட்டி உறங்கவைத்து
உற்றவர்களை துக்கத்தில் ஆழ்த்துவது ஏனோ?

கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

உன் எல்லை வரை
கண்ணுக்குள் பிடிக்க முடிந்த - உண்னை
கைகளால் பிடித்து நிறுத்த முடியவில்லையே

ஏன்னென்றால்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்

ஆழகாய் இருகிறாய் உன்னை -காண
எல்லோரும் ஆசைப்பட வைகிறாய்
குளிர் காற்றை வீசுகிறாய்
கும்மாளம் போடா வைகிறாய்
தம் நிலை மறக்க செய்கிறாய்
சந்தோசத்தை அள்ளிதருகிறாய்
சாந்தபடவும் வைகிறாய்

ஆனால் -நீ மட்டும் திடீர் என்று
சொல்லாமல் கோப படுகிறாய்
பேரலைகளாய் ஆர்பரித்து
ஆவேசமாய் உயிர்களை அள்ளிச்செல்கி
ஆவேசமாய் உயிர்களை அள்ளிச்செல்கிறாய்
இது நியாமோ நியாமோ ?
ஏன் என்றால்
கடலே உனக்கு இல்லை
கற்பும் கனவும் காதலும்
பாசமும் அன்பும் இரக்கமும்
********************************************
மணைவி
புன்னகையால் வரவேற்று
புண் சிரிப்பாய் உபசரித்து
எதிர்பார்ப்பு இல்லாமல் அரவணைத்து
கற்பும் கணவனும், கண்நென - நிணைத்து
இல்லவனின் உளத்தில் உயிராய் கலந்து
உயிர் பிரியும் நிலை வரையும்
ஒட்டி திரியும் உறவு மணைவி
***********************************
விபச்சாரிகள்

பொய்யாய் ஓரு சிரிப்பு
நேசமில்லாத அரவணைப்பு
காசு வாங்கி நேசம் காட்டும் கூலிகள்
கற்பு நெறிக்கு மைல் கல்லாய்
தொலை தூரத்தில் திரியும்
அழகிகள் விபசாரிகள்

*************************

கருத்துகள் இல்லை: