ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

முத்தம்
என்னுள் இருந்த தாகத்திற்கு
என் உதடுகள் பட்டதாலே
உன்னுள் இருத்த மொத்த -ஈரமும்
என்னுள் வார்கபட்டதோ - சொம்பே??????/
************************************
எப்படியோ உறவு வேஆண்டும்

எப்படி ஓரு உறவு வேண்டும்
அது இப்படிதான் இருத்தல் வேண்டும்
மனைவியாக கிடைக்க வேண்டும்
அப்படி ஓரு கற்பனையில் -இதோ

என்னவளே என் வாழ்வை
இனிக்கச் செய்திட வருபவளே
பொன்னகையும் பொறுமையும்
புன்னகையும் பொறுப்பும்
அன்பும் அரவணைப்பும்
பண்பும் பாசமும்
சீராக கொண்டுவந்து
எங்களை சீராட்டி பொழுதும்
பார்த்து பார்த்து காத்திடும்
கருணை உள்ளம் கொண்டவளாய்
மரியாதையையும் மானத்தையும்
உயிராய் கருதுபவளாய் -என்னை
தன் உயிரோடு உயிராய் இனைதவளாய்

அன்பும் ஆசையும் அக்கறையுமாய்
என்னை ஆட்கொண்டு அதிகாரம்
செலுத்தி இல்லறம் நடத்தி -இனிமை
தந்திட ஓரு நல்ல மணைவியை
தந்திடு இறைவா நன்றி சொல்லுவேன் -உனக்கு
*****************************************

latha:
(2) முத்தம்
நான் எந்தனை முறை கெஞ்சினேன் கொஞ்சினேன்
நெற்றியில் இல்லை கன்னத்தில்
ஒரே ஓரு முத்தம் கொடு -என்று

அன்று -வெட்கம் என மறுத்தாய்
இன்றோ -நான் கேட்க்காமலே
அலை பேசியில் அழைத்து
முத்தங்களை மொத்தமாக
அள்ளி தெளித்து -என்னை
வெட்கத்தில்; ஆழ்த்திவிட்டாயே -கண்ணா !!!!!!!!!!

இதை- அன்று நேரிலே தந்திருந்தால்
எத்தனை சந்தோசப்பட்டு இருபேன்
சன்தோசாமெனும் ஆழி பேரலையில் மூழ்கி
ஆகாயத்தி பறந்து விண்ணை தொட்டு இருப்பேனே
போடா என் செல்ல பேராண்டியே
(
( இது பாட்டி சொன்னது )
*********************************

(3) முத்தம்
உண்னை உட்சி முகர்ந்து
நெற்றி முதல் பாதம் வரி
முத்தமிட்டு மகிழ்ந்ததுவோ
உன் -கள்ளமில்லா சிரிப்பை கண்டு
கண் குளிர சந்தோசிக்கவே
என் -அன்பு செல்லமே
என் -உதிரத்தில் உதித்த குட்டி தேவதையே!

உன் -பட்டு மேனியும்
தளிர்கரங்களும் பிஞ்சுகால்களும்
அசைத்து அசைத்து நீ சிரிக்கும் -சிரிப்போ
காண்போரை வாரியணைத்து
முத்தமிட்டு மகிழச்செய்கிறதே
என் -அன்பு செல்லமே செல்லமே
**************************************

மௌனம்
உன் -மௌனம் உனக்கு சந்தோசத்தை தரலாம்
ஆனால் -எல்லோருக்கும் சந்தோசம் தருவதில்லை

மௌனத்தில் அர்த்தம் வேண்டும்
அர்த்தமில்ல மௌனத்தால்
ஆவது எதுவும் இல்லை
அர்த்தமுள்ள மௌனத்தால்
அத்தனையும் அடைந்திடுவாய்
அண்டமும் ஆளலாம் அகிலமும் ஆளலாம் ***
***************************
என்னை பற்றி

முன் பின் அறியாதவர்களிடமும்
எதிரிகளிடமும் துரோகிகளிடமும்
கொலைகாரர்களிடமும் இரக்கமும்
அன்பும் காட்டும் மனம் -உண்டு

ஏனெனில் பிறப்பின் போது
எல்லோரும் தூய்மையானவர்களே
ஆளாகும் சூழ்நிலையில் ஏற்ப்படும்
மாற்றங்களும் பழக்கங்களுமே-ஒருவரை
நல்லவராகவும் தீயவராகவும் மாற்றுகிறது
இதில் -ஆண்கள் பெண்கள் குழந்தைகள்
என-எந்த ஓரு பேதமும் (மாற்றமும் ) இல்லை

பூ மனம் படைத்த எனக்கு
புன்னகைக்கவும் தெரியும்
புயலாக மாறவும் தெரியும்

நட்பு எனும் சொல்லுக்கு நன்றி மறவேன்
அன்பு எனும் சொல்லுக்கு அனைத்தையும் மறவேன்

பேசவும் பழகவும் இனிமையானவள்
இல்லத்தின் இனிமைக்கு சுவை ஏற்றுபவள்
இல்லத்தின் சுமைகளை இனிமையாக சுமப்பவள்
நம்பியோருக்கு ஒளியாக இருப்பேன்
யாமாற்றுபவற்கு இருளாக இருபேன்

முன் ஒன்று பின் ஒன்றுமாக
பேசுபவரை அறிந்தாலோ
மீண்டும் சந்திக்க கூடாது என நினைப்பேன்

அன்புக்கு உரியவர்களின் அடக்குமுறைக்கு
ஆயுளுக்கும் அடிமைப்பட்டு கிடப்பேன்
ஆசை வார்த்தைகளுக்கோ அடிபணிய மாட்டேன்

என் -மென்மையான உள்ளதை ரணப்படுத்தினால்
முள்ளாக குத்தவும் தயங்க மாட்டேன்

மொத்தத்தில் பார்வைக்கு பூவாகவும்
பழகுவதற்கு புயலாகவும் இருபேன்
நல்லோர்க்கும் தியோருக்கும் -தக்கபடி
இப்படிக்கு - பூவும் நானே புயலும் நானே
*****************************
பூங்காவனம்

புல்வெளியே பஞ்சு மெத்தையாகவும்
மரமோ குடையாக நிழல் -தர
அதன் - அசைவினிலே உருவாகும்
காற்றோ - தென்றலாக தாலாட்ட

உதிரும் பூக்களோ வாக்ல்து சொல்ல
நிம்மதியாய் சிலநிமிடம் நித்திரை கொள்ள
ஏழைகளுக்கும் இடம் உண்டு
படுகையரையாக பல பூங்காவனங்கள்
*********************

நிழல்
நம்மை தொடரும் -நிஜம்
நம் -உண்மைகளை பிறகு தெரியாமல்
தன்னுள் புதைத்து கொள்ளும்
நம்மின் நிஜமே நிழல்
*******************

மனமே
மனமே மனமே மயங்காதே
ஆசை புயலில் உழலாதே
உண்மை எதுவும் மறையாதே

நட்பில் நீயும் அழியாதே
அன்பில் என்றும் கரையாதே
ஆழம் அறியாது இறங்காதே
**********************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
****************************

நட்பே
நட்பில் உண்மை வேண்டும்
நடத்தையில் நேர்மை வேண்டும்
அன்பில் உண்மை வேண்டும்
அறிவில் தெளிவு வேண்டும்

ஆனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
விட்டு கொடுக்கும் மனம் வேண்டும்
நீ வருவதும் தெரியும்
போவதும் தெரியும்
ஒளிந்து ஒளிந்து விளையாடுவதும் -புரியும்

ஆனால் -மற்றவர்களை காக்கவைத்து
நோகடிப்பதில் ஏனோ உனக்கு சந்தோசம்
*************************

பெண் மனம்
நங்கூரம் இட்டாலும்
மனதின் நிலைதனை
அறியமுடியாதா இதயம் படைத்தவர்கள்

இதுவரை யாரும் -இவள்
இப்படிதான் எப்போதும் -என
அறிதிட்டு கூறி ஜெய்ததும் -இல்லை
********************

கருத்துகள் இல்லை: