செவ்வாய், 16 நவம்பர், 2010

நட்ப்பே சரியோ ?

எப்படி சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கியமில்லை

எப்போது சேர்ந்தோம் நட்ப்பாய்
என்பதும் முக்கிமில்லை

எப்போதும் நட்ப்பாய் இருப்போமா ?
பிரிவு வருமோ வராதோ ?
என்பதுதான் முக்கியம் நட்பில்

பிரிவு இல்லாத நட்புதான் என்றும்
ஜெய்க்கும் எப்போதும் அன்புடன்

உன் நினைவுகளில் - நான்
மறுக்கபட்டேனா இல்லை மறைக்கபட்டேனா ?

உன்னால் முடிவது -எப்போதும்
என்னால் முடிவதில்லை ஏனோ?

நீ -நினைக்கும் போது அன்பாய் இருகிறாய்
உனக்கு -தேவை இல்லாத போது
அன்பை மறுக்கிறாய் மறைகிறாய் ஏனோ ?

இதில் -உனக்கு சந்தோசம் இருக்கலாம்
எனக்கு எப்போதும் வேதனைதான்

உன் ஆழ்மனதிற்கு சென்று -உன்
உன் உயிருடன் கலந்த
நினைவுகளை தொட்டுகேள்
உன் -நட்பும் அன்பும் சரியோ என்று ?
என்று எப்போதும் அன்புடன் என்று ?
*************************************
நட்பு

உள் மனது ஊமையாக அழுதாலும்
வெளி மனது போலியாக நடித்தாலும்

எத்தனை நாள் நட்பு
எளிதில் மறக்குமோ -உள்ளம்

மறப்பது போல் நடித்தாலும்
நாடி நரம்பில் ஓடும் உயிர்ரும்
நட்பை காண எப்போதும்
அலைபாயும் நம் விழிகளும்

இல்லாத நேரங்களிலும்
நட்பு வரும் பாதையை நோக்கியே
************************
ஆசை

எண்ணி மகிழும் எண்ணமும் இல்லை
எட்டி பற்றிக்கும் தூரமும் இல்லை
தட்டி கேட்கவும் நேரமும் இல்லை
நீ யார் என்று தெரிந்து கொள்ள

மின்னலாய் வந்து போன தென்றலே
மழையாய் கொட்டுகின்ற உன் அன்பும்
அட்டையாய் ஓட்டுகின்ற உன் நேசமும்
பெண்ணே எனக்கு உன் மீது

எப்போதும் ஆசைதான்

*********************************
மாலை மேகம்
மேகமே உன் சிகப்பு வண்ணம் பட்டதுவும்
சூரியனும் வெட்கத்தால் சிவந்ததோ

பார்பதற்கு கொள்ளை அழகு என்றாலும்
ரத்த சிகப்பின் வண்ணம்
எச்சரிக்கை விடுகிறதோ
என்னை தொட்டால் எரித்துவிடுவேன் என்று
********************
ஆசை
ஏழையோ பாளையோ
கொண்டவன் எப்போது
உடன் இருக்க -ஆசை சிலருக்கு

உடன் இருந்தால் எப்போதாவது
வந்தால் போதும் என்று சிலருக்கு

கிடைப்பது விருப்பம் போல் அமைந்தால்
உலகத்தில் எல்லோரும் சந்தோசமாக
வாழ்ந்துவிட்டால் துக்கம் கஷ்டம் சோகம்
இருக்காது என்றோ இறைவன் -எல்லோருக்கும்
மாறுதலான வாழ்கையும்
ஏக்கத்தையும் கொடுகிறானோ என்னவோ
************************

முத்தம்
இரண்டு உதடுகளும் ஒட்டும் போது
நாவகிய நான் பல்லுடன் ஒட்டி கொள்கிறேன்
வெட்கத்தால் யாருக்கோ முத்தமிட
போகிறீர்கள் என்று
**************

ஸ்ரீ பிரியா (இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் )

பக்கத்துக்கு வீட்டு பாலகனோ
இல்லம் பருவம் முதல்
நண்பனாய் காதலனாய் கணவனாய்
மாறும் நிலை வரை வந்து
பணம் எனும் மாயபிசாசின் மயகதால்
முதல் காதல் முற்றிலும் கோணலாய்
தட்டி போன கொடுமை என்ன ?

பெற்றறோரின் பிரியத்திற்கு
தலை தாழ்த்தி எற்ற வாழ்கையில்
சந்தோசமாய் வாழ்ந்து தாய்மை எனும்
சுவர்க்கம் எய்தி இருமுறை
கரு கலைத்த சோகம் என்ன ?
இனி தாய்மைக்கு வாய்ப்பு இலாது
கருவறையை வெட்டி எடுத்த சோகம் என்ன ?

அத்தனையும் தாங்கி தாய் தந்தை இல்லது
தாயகமே சொந்தம் என்று வாழும்
தனிமரத்து இளங்குயில்லே



அம்மாஞ்சி ஆத்துல
ஆழகாய் பிறந்து
ஸ்ரீ பிரியா என நாமம் சூடி
சிங்காரமாய் வளர்ந்த
ஆழகு தேவதையே
உன் வாழ்வு சிறக்க
நீடூடி வாழ வாழ்த்தும் -உன்
இனிய தோழன் ஆதி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
***********************

நட்பு

இருகிறாய் இல்லது போல்நடிக்கிறாய்
ஒளிந்து ஒளிந்து சிரிக்கிறாய்
ஒய்யாரமாய் ரசிக்கிறாய்
ஓர பார்வையால் பார்க்கிறாய்
பேசாது மறைகிறாய்
தேவை என்றால் வருகிறாய்
நட்பே நலமோ என்று
தெரியாது போல் விசாரிகிறாய்
என்றும் அன்புடன்
***********************
ஆசை
அலைக்கு கடல் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

நிலவுக்கும் சூரியனுக்கும்
மேகத்தின் மேல் ஆசை
அதனுள் தஞ்சமடைகிறது

மேகதிற்கு பூமியின் மீது ஆசை
மழையாய் பூமியை தஞ்சமடைகிறது

மனிதர்கள் ஜீவராசிகளுக்கு பூமி மீது ஆசை
எல்லா உயிர்களும் பூமியை தஞ்சமடைகின்றன
***************************

கருத்துகள் இல்லை: