வெள்ளி, 2 ஜூலை, 2010

puthukavithai

மழையில் பிடித்த காதல்


சிறு தூரலில் சிரித்த உன் முகமோ
பெரும் மழையால் கலங்கியது -ஏனோ ?
உன் -வீடு மூழ்கிவிடும் என அட்சமோ ?
கலங்கதே பெண்னே காதிருகிறேன்
என் -இதயத்தில் புகுந்த உன்னை
கலங்க விட நான் ஒன்றும் அரக்கனல்ல

மழையில் நீ விட்ட கத்திக்கப்பல்
என் -உளத்தில் மூழ்கி தத்தளிக்கிறதே
அதில் -உன் பெயரும் என் பெயரும்
இல்லாத சோகத்தில்


அடை மழையில் ஒதுங்கிய எனக்கு
திணையில் இடம் தந்த -நீயோ
உன் -அன்பில் திளைத்த எனக்கு
உன் -உளத்தில் இடம் தர மாட்டாயோ பெண்னே !!!!\

(இதை தலை கீழாகவும் படிக்கலாம்)

கீழ் இருந்து மேல் )


*****************************************************


இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்

தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது

****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை

அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை

உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்

*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)

*************************************************
இதயம்
இதயம்
இதயத்தில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆசையாய் சிறகடித்து -இங்கு
உன் -இதயமே பட்டாம் பூச்சிகளாய்
பறப்பது ஏனோ ? எதர்க்கோ ?

**********************************************
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/


*********************************************************
நட்பு

நீ theaடும் நபர் இல்லை -என்று
ஓரு வரியில் உன் விரல்கள் சொன்னாலும்
அதை உன் மனம் சொல்லவில்லை -என்று
எனக்கு எப்போதும் புரியும்

நிறம் மாறாத பூவை -போல்
நட்பின் குணம் மாறது
நட்பின் சுவாசத்தை உணர
நீண்ட நாள் காத்திருக்க -நான்

நீயோ ஒற்றை வரியில்
பல நாள் கழித்து வந்து
வண்ணம் மாறும் பட்சோந்தி போல்
நீ தேடும் நபர் நானில்லை -என்று
உன் விரல்கள் சொன்னாலும்

மனம் வருந்தியது முதலில்
பிறகு இதுவும் நன்மைக்கோ என
நட்பில் ஏமாந்தவர்கள் வரிசையில்
நானும் இப்போது நன்றி

********************************

பிரிந்த நட்பும் காதலும்
பிரிந்த நட்பும் காதலும்

பிரிந்த நட்பும்
பிரிந்த காதலும்
பல நாட்களோ
பல வருடங்களோ கழித்து
நமை கடந்து போகையில்
இதயத்தின் எல்லையில்
ஒளிந்திருக்கும் நிணைவுகள்
உணர்வுகளால் உந்தப்பட்டு
இருவரையும் திரும்பி பார்க்க சொல்லும்
அது -நமக்குள் பிரிவு இல்லை
உண்மையான நேசம் என உணர்த்தும்
*******************************
காதல் (தத்துவங்கள்)
காதல் (தத்துவங்கள்)


1) மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ..................

2) வெற்றி பெற்றவனுக்கு
காதல் ஓரு மைல் கல்
தோல்வி உற்றவனுக்கு காதல்
ஓரு நிணைவு சரித்திரம் !!!!!!!!!!!!!!!

3) மனம் காற்றாடியாய் அலைந்தாலும்
பறவையாய் இறக்கை கட்டி பறந்தாலும்
கல்லறையே முடிவு என்றாலும்
கால் கடுக்க காத்து கிடப்பது
உண்மை காதல் ..................


4) கல்லடி பட்டு சிதறினாலும்
கண்ணாடியின் எல்லா துண்டுகளிலும்
பிம்பங்கள் பிரதிபலிப்பது போல்
இறப்பின் எல்லை வரை
எந்நிலையிலும் மின்னி மறைவது
உண்மை காதல் ..................

5) கண்ணா மூச்சியாய் காலங்கள் கடந்தாலும்
கடல் ஆழம் போல்
எல்லை காண முடியாது
நினைவலைகளாய் மனதில்
அலைபாய்ந்து ஒளிந்து கொள்வது
உண்மை காதல் ..................



*********************************************************************************************************************************************


அன்பே என் அன்பே

1)வெத்து தாளை கொடுதேன் -எனை
வெறுப்பாய் பார்காதே -நீயும்
தாளினில் பேனாவில் -உன்
பெயரை எழுதும் போது
முனை குத்தி உனக்கு
வலிக்கும் என்பதாலே
என் -இதயத்தில் எழுதி கொண்டு
உனக்கு வெற்று தாளை தந்தேன்
அன்பே என் அன்பே !!!!!!!!!!!!!!

********************************************
2) அன்பு என்ற மூன்று எழுத்தை
காதல் என்ற மூன்று எழுத்தாய்
கடிதம் என்ற நான்கு எழுத்தில்
கட்டிபோட்டு உன்னிடம் கொடுக்க
விருப்பமில்லை எப்போதும் எனக்கு
அன்பே என் அன்பே !!!!!!!!!
*******************************************
3) உன் -பார்வையின் அர்த்தத்தை
மனதில் படம் பிடித்து
இதயத்தில் பூட்டி வைத்து
தொலைக்காமல் காத்திருக்கிறேன்
நீயும் -எனை சிறைபிடித்த பின்
என்னிடம் உன் காதலை சொல்ல
உன் -வாசத்தை காற்றில் சுவாசித்த படி
தினம் நீ எனை கடந்து போகையில்
அன்பே என் அன்பே!!!!!!!!!
*************************************
4) நீ புத்தகமாக இருந்தால்
படித்து இருப்பேன்

ஓவியமாக இருந்தால்
ரசித்து இருப்பேன்

சிற்பமாக இருந்தால்
சிந்தை மயங்கி நின்று இருப்பேன்

அலையாக இருந்தால்
ஓடி பிடித்து விளையாடி இருப்பேன்

காற்றாக இருந்தால்
உன்னுடன் கலந்து
தென்றலாகி இருப்பேன்

மேகமாக இருந்தால்
சந்திரனாய் பிரகாசித்து இருப்பேன்

நீ -உயிராகி போனதாலே
என் -உயிர் துறந்து உன்னுடன்
கலக்க முடியாதே - நீ
என் காதலை உணர
அன்பே என் அன்பே!!!!!!

***********************************************************************************************************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 11:41 pm 0 கருத்துரைகள்
இனியவளே

கிராமத்தான் என்றாலும்
படித்தவன் என மனத்தால் விரும்பி
விவசாயி என்னை மணந்த
படித்த பட்டதாரி மணைவியே
என் -உயிரின் இனியவளே !!!!!!!!!!!!!!!!

பாசமாய் நேசமாய் ஓர் உயிராய் கலந்து
நாம் -வாழ்ந்த இல்லறத்தின்
சந்தோசம் விருட்சமாய்வளர
மணியான முத்து மகனை ஈன்று தந்த
என்- உயிரினும் இனியவளே !!!!!!!!!!

தத்தி தவழ்ந்த மழலையின்
முத்துகளாய் சிதறிய
சிறு வார்த்தைகளில் மயங்கி
மெய் மறந்து ரசித்ததை
என்னிடம் சொல்லி சொல்லி மகிழ்வாயே
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

இன்று -நம் வாழ்கையின் பயணத்தில்
ஏன் -இந்த திடீர் மாற்றமோ ?
உண் -உடன் பிறந்தான் இறந்ததால்
நீ -உண் பிறந்தகத்தில் பெற்றோர்களுடன்
இருகவேண்டிய நிலை ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -இரு கண்களுமானா
நீயும் மகனும் எனை பிரிந்து
அங்கு -இருபது அவர்களுக்கு சந்தோசம் என்றாலும்
இங்கு -கண்ணிருந்தும் குருடனாய்
நினைவிருந்தும் பித்தனாய்
நூலறுந்த பட்டம் போல்
உயிர் இருந்தும் ஜடமாய்
வாழும் நிலை எனக்கு ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

திருமணம் முடிந்ததும்
நாம் கிராமத்தை சுற்றியதும்
தோட்டத்தில் இருவரும்
நிலவை ரசித்தபடி சந்தோசமாய்
பேசிய நாட்கள் மீண்டும் கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

குழந்தையுடன் ஓடி பிடித்து
விளையாடி உணவு ஊட்டிய
குதூகலமும் உற்சாகமும்
இனி எப்போது கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

தனித்து பித்தனாகி இங்கு
உங்கள் நினைவுகளுடன் -தோட்டத்தில்
மரங்களுடனும் செடிகளுடன்னும்
பேசி கொண்டு இருக்கிறேன் நீங்கள்
என்னுடன் இருப்பதாக நிணைத்து
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -நிலை உணர்ந்து நீ
சிந்தித்து முடிவு செய்து
இங்குவர காத்திருக்கிறேன்

**********************************************************************************************************************************************


திருமண வாழ்த்து

புலி கொடி பறக்கும்
வீர மா நகரம்
பெரிய கோவிலை பெற்று
பெருமையுடன் விளங்கும் தஞ்சை
மாநகரிலே நடக்கும்
பத்மவள்ளி -கௌதமன்
தம்பதியருக்கு திருமண வாழ்த்து
மணநாள் 19-05-2010



பல மனங்கள் இணைந்து
முடிவுசெய்து முடிசுபோட்டு
இருமனங்கள் கலந்திட
நல் -மனங்கள் வாழ்த்திட
நடத்திடும் ஓர் இனிய விழா
திருமணம் திருமணம்

நீவீர் இருவரும்
அன்பை பரிமாறி
இரு மனங்களும் ஓரு மனமாகி
இல்லறமெனும் நல்லறம் நடத்தி
குலம் விளங்க நாடு விளங்க
நல் மக்களை பெற்று
நாடும் வீடும் போற்ற
சீராட்டி பாராட்டி
சிறப்புடன் வளர்த்து
நல்ல தமிழ் மகனாக
நாடு போட்ரும் வீர மகனாக வளர்த்து

இல்லறத்தின் இனிமையை
இளமை முடியும் முதுமையிலும்
சந்தோசமாய் வாழ்ந்து
சரித்திரம் படைக்க
மனமார வாழ்க வாழ்க -என
வாழ்த்தும் உங்கள் தோழமை
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 8:05 am 0 கருத்துரைகள்
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
திருமணம் ( குட்டி கவிதைகள் பத்து )

பல மனங்கள்
முடிவு செய்து
இரு -மனங்களை
இணைப்பது திருமணம்
************************************
விவாகரத்து

இரு -மனங்கள் முடிவு செய்து
பல -மணங்களை
நோகடித்து பிரிவது விவாகரத்து

***********************************************
அழகு
பின்னாளில் உரு குலைந்து -போனாலும்
முன்னாளில் அல்லைய வைப்பது -அழகு

*************************************************
அன்பு
இறந்து போனாலும்
அனைவரையும் மனம்
உருகி அழவைப்பது -அன்பு


(2) என்றோ நீர மறந்து -போனாலும்
இன்றும் என்னை அழவைப்பது
உம் -உண்மை அன்பு
**********************************
உயிர்
காற்றில் கரைந்தாலும்
கண்ணீரில் மறைந்தாலும்
அன்பே என் -நிணைவுகள் உனக்கும்
உண் -நிணைவுகள் எனக்கும்
என்றும் -உயிர் என்று
அந்த காலனுக்கு (எமன் ) தெரியுமோ ?

****************************************

குழந்தைகள்
முன்னாளில் நமக்கு -நிழல்
பின்னலில் நாம்
அவர்களுக்கு நிழல்
******************************************

பரம்பரைகள்

நம் -வாழ்க்கை சுவடை
வாரிசுகள் வழியாக
வழி வழியாய் வாழ்ந்து
காட்டும் நாடக கூட்டங்கள்
பரம்பரைகள்
**************************
நிழல்
நிணைவில் தேங்கிய
நிஜங்களின் மறைப்பு -நிழல்
****************************************
புருஷன்
பிடிக்காத மணைவி என்றால்
அவளுடன் பேசமாடான்
சண்டை போடா கூட -எப்போதும்

பிடித்த மணைவி என்றால்
அவளுக்கு இவனை பிடிக்கா விட்டாலும்
கனவிலும் கூட பேசுவான்
அவளுடன் எப்போதும்
********************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 8:26 am 0 கருத்துரைகள்
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )

சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧

உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்

குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!

நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை

உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்



**************************************************

உறவுகள்

அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்

அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்

அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்

கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்

நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்

*******************************************

கல்லூரி நாட்கள்

கிராமத்திலே பிறந்து
பள்ளி பருவமதில்
பாடங்களை முடித்து

பட்டபடிப்பை படித்திடவே
ஆகாயத்தில் பறக்க ஆசை பட்டு
இளங்காளை நானோ
கல்லூரியில் அடிவைத்து

வண்ணத்து பூட்சிகள் நடுவே
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
பறந்தோமே நானும் நண்பர்களும்

பாடங்களை படித்தோமோ இல்லையோ
எல்லா படங்களையும் பார்போமே

பீயூடிகளை பார்த்து
லூட்டிகள் அடித்ததும்

உடன்படித்த தோழிகளின் முன்னே
நாகரீகமாக நடந்தாலும்
அவர்களின் பின்னோ அடித்த
நக்கலும் நையாண்டியும் எங்கோ ?

புரபசர்களை புரட்டி போட்ட
நாட்கள் எங்கோ ?
கல்லூரியில் இருக்கும் மரங்களில் சாய்ந்து
காதலிக்கு கடிதம் எழுதிய
நாட்கள் எங்கோ ?

நானும் கம்பனாகி கவி புணைந்து
புவனியிடன் கொடுத்து -என்
சந்தோசங்களை தொலைத்த நாட்கள் எங்கோ ?

அன்பே-என் உடல்மட்டும்
தனித்து இங்கு-என்
உயிரோ உன்னுடன் கலந்துவிட்டது
உயிர் இல்லா இவ் உடலோ
உண் நிணைவால் ஜடமாய்
சுற்றுகிறது றன்று -நான்
புணைந்த கவிதையில் மயங்கி

உடல் வேறு என்றாலும்
உயிர் ஒன்றாக கலந்தபின்
இனி சேர்ந்தே உணவு உண்போம் என்று
தினம் எனக்கு மொய்வைத்து
என்னை போண்டி ஆகி என்னிடம்
பணம் இல்லை என்று ஓரு முறை சொன்னதும்
படவா நீ வேஸ்ட் என்று
என்னை தூக்கி எறிந்து விட்டு
நீ -போன பின் நான் தாடியுடன்
படிப்பை முடித்த அந்த சோக நாட்கள் எங்கோ ?

படிப்பை முடித்து ஆகாயத்தில் பறக்கும்
வேலை கிடைத்து நான்
சந்தோஷத்தில் பறந்தாலும்


சந்தோசங்களும் நிணைவுகளும்
கானல் நீராய் இருந்தாலும்
இனி அந்த கல்லூரி நாட்கள்
எனக்கு திரும்ப கிடைக்காதே
***********************************************
இடுகையிட்டது தமிழ் கவிதைகள் நேரம் 7:37 am 0 கருத்துரைகள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)


Sent at 8:20 PM on Friday

கருத்துகள் இல்லை: